பென்ஷன் பெறுவோர் வீட்டிலிருந்தே வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.. தவறினால் ஓய்வூதியம் கிடைக்காது
சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு வங்கிக்கு செல்ல முடியாதவர்களுக்காக, வீட்டில் இருந்தபடியே வாழ்நாள் சான்றிதழை ஓய்வூதியதாரர்கள் பெறலாம்.. இதற்காக சில வழிமுறைகளை மத்திய அரசு எளிமையாக்கியுள்ளது. இது பென்ஷன்தாரர்களுக்கு மிகுந்த பலனை தந்து வருகிறது. தற்போது நவம்பர் மாதம் என்பதால், வாழ்நாள் சான்றிதழை பென்ஷன்தாரர்கள் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் (DLC) என்பது, ஓய்வூதியதாரர் ஓய்வூதிய சலுகைகளை பெறத் தகுதியுடையவர் என்பதை உறுதிப்படுத்தும் ஆயுள் சான்று ஆவணமாகும். இது பயோமெட்ரிக் இயக்கப்பட்ட ஆதார் அடிப்படையிலான ஆயுள் சான்றிதழாகும்.

ஓய்வூதியதாரர்கள்
ஓய்வூதிய பணம் தவறாக பயன்படுத்தப்படுவதையும், மோசடிகளையும் தடுப்பதற்காக, ஓய்வூதியம் வழங்கும் ஏஜென்சிகள் (PDAs) ஓய்வூதியத் தொகையை வரவு வைப்பதற்கு முன்பு இந்தச் சான்றிதழைச் சரிபார்ப்பது அரசினால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பென்ஷன் பெறுவோர் ஒவ்வொரு வருடம் நவம்பரிலும் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்..
இதில், 80 வயதுக்கு மேற்பட்ட அதிமூத்த குடிமக்களுக்கு, அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 வரைச் சமர்ப்பிக்கக் கூடுதல் ஒரு மாத அவகாசம் வழங்கப்படுகிறது. ஒருவேளை அவர்கள் சமர்ப்பிக்க தவறினால் அவர்கள் ஓய்வூதிய பலன்களை இழக்க நேரிடும்.
பென்ஷன் பெறுவோருக்கு ஈசி
முன்பெல்லாம் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கு ஓய்வூதியதாரர்கள் வங்கி, ஈபிஎஃப்ஓ அலுவலகம் என்று நேரில் சென்று அலைய வேண்டியிருந்தது. ஆனால், இன்று வங்கிக்கோ, போஸ்ட் ஆபீசுக்கோ செல்லாமல், வீட்டிலிருந்தபடியே ஆன்லைனிலேயே ஆயுள் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது சமர்ப்பிக்கலாம்.
ஆயுள் சான்றிதழுடன், ஓய்வூதிய விநியோகத்தை உறுதி செய்வதற்கு அடையாள சான்றிதழ், வயதினை உறுதி செய்ய ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ் அல்லது 10ம் வகுப்பு மதிப்பெண் அட்டை, குடியிருப்புச் சான்று, IFSC குறியீடு மற்றும் பாஸ்புக் நகல் உள்ளிட்ட வங்கிக் கணக்கு விவரங்கள், வருமான அறிவிப்பு மற்றும் ஓய்வூதியக் கட்டண ஆணை (PPO) எண் போன்றவை கட்டாயம் தேவைப்படும்.
ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம்
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியிருந்தது.. அதில், "நாடு முழுதும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் 4.0-ஐ நவம்பர் 1 முதல் 30ம் தேதி வரை அனைத்து 1600 மாவட்டங்கள் மற்றும் துணைப்பிரிவு தலைமையகங்களில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை நடத்த உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.
தற்போது நவம்பர் மாதம் துவங்கியிருக்கும் நிலையில், ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழைச் சமர்ப்பிக்க 3 விதமான எளிய வழிகள் செய்யப்பட்டுள்ளன.
வீட்டு வாசலிலேயே வாழ்நாள் சான்றிதழ்
முதலாவதாக, வீட்டு வாசலில் சேவை (Doorstep Banking) மூலம் ஓய்வூதியதாரர்கள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி, முக அடையாளம் வைத்தும் டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
எனவே ஓய்வூதியர்கள் தங்கள் பகுதியில் உள்ள தபால்காரரிடம் ஆதார், செல்போன் எண், PPO எண், ஓய்வூதிய வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களிலேயே டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.
இதற்கு, தங்கள் பகுதியிலுள்ள போஸ்ட்மேன் அல்லது போஸ்ட் ஆபீஸை தொடர்பு கொண்டு, வாழ்நாள் சான்றிதழ் வேண்டும் என்று சொன்னாலே போதும், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ஊழியர்கள், உங்கள்வீட்டு வாசலுக்கு வருவார்கள். இதற்கு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
ஆன்லைனில் ஆயுள் சான்றிதழ்
அதேபோல https://jeevanpramaan.gov.in என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்குள் சென்று ஆதாரை பயன்படுத்தி சான்றிதழை சமர்ப்பிக்கலாம். அல்லது விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம்.
அதேபோல இந்திய குடிமக்களுக்கான அரசு சேவைகளை வழங்கும் UMANG செயலியிலும், சான்றிதழை பெறலாம். இதற்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் UMANG என்ற ஆப்பை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். அதில், 'Jeevan Pramaan' என்பதற்குள் நுழைந்து, 'Generate Life Certificate' என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் போதும்.. அனைத்து விவரங்களையும் பதிவிட்டு, சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
ஆஃப்லைனில் பெறலாம்
ஆஃப்லைனில் அதாவது வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸுக்கு நேரடியாகவே சென்று சான்றிதழை சமர்ப்பிக்கலாம். பொதுச் சேவை மையத்திற்கு (CSC) நேரில் சென்றும், தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து ஆயுள் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications