விழி பிதுங்க வைக்கும் தங்கம் விலை! சென்னையில் ஒரு குண்டுமணிக் கூட வாங்க முடியாது போலயே!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 58 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இதனால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். வெள்ளி கூட வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டே போகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.

சென்னையில் அக்டோபர் 19ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 320 உயர்ந்துள்ளது. இதன் மூலம் கிராம் ஒன்றுக்கு 40 ரூபாயும், ஒரு கிராம் ரூ 7280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சவரன் ரூ 58ஆயிரத்தை தாண்டியது. அதாவது ஒரு சவரன் ரூ 58,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் வெள்ளியின் விலையும் ரூ 2 உயர்ந்து கிராம் ஒன்று ரூ 107க்கும் ஒரு கிலோ 1,07,000 க்கும் விற்பனையாகிறது.
இந்த நிலையில் தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. அக்டோபர் 17 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 57,280 -க்கு விற்பனையானது. அது போல் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ 20 உயர்ந்து ஒரு கிராம் ரூ 7,160 க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய பட்ஜெட்டின் போது தங்கம் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் தங்கத்தின் விலை அன்றாடம் குறைந்து 50 ஆயிரத்தை தொட்டது. ஆனால் அதன் பிறகு அதிகரித்த நிலையில் தற்போது 58 ஆயிரத்தை தொட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்குள் ரூ 60 ஆயிரத்தை எட்டி விடும் நிலை உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு புதிதாக திருமணமான தம்பதிக்கு மோதிரம் எடுத்துக் கொடுப்பது வழக்கமாக உள்ளது. இந்த வழக்கத்தை சாமானிய மக்கள் எப்படி செய்ய போகிறார்கள் என்பது கேள்வியாக உள்ளது.
சென்னையில் நேற்று அக்டோபர் 18 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 640 உயர்ந்தது. இன்று ஒரு கிராம் விலை ரூ 7240 க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 57,920 க்கு விற்பனையானது.
அது போல் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ 2 உயர்ந்து ரூ 105 க்கு விற்பனை செய்யப்பட்டது. 18 காரட் தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ 560 உயர்ந்து ரூ 47,880-க்கும் கிராமுக்கு ரூ 5,985 க்கும் விற்பனை செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications