ஈரான் போர் உச்சத்துல இருக்கு.. ஆனாலும் இந்தியாவில் தங்கம் விலை பெருசா உயரல! காரணம் இதுதான்!
சென்னை: ஈரான்-அமெரிக்கா போர் உச்சத்தில் இருக்கிறது. பொதுவாக இப்படி சர்வதேச அளவில் பஞ்சாயத்துகள் வெடிக்கும்போதெல்லாம், தங்கத்தின் விலை உயரும். ஆனால், இந்த முறை பெரிய அளவில் விலை உயரவில்லை. குறிப்பாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏறவில்லை.
சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரிக்கும்போது தங்கம் விலை குறைவது வழக்கம். அந்த வகையில் இப்போது டாலர் மதிப்பு அதிகரித்திருப்பதால், தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது.

தங்கம் விலை
போர் காலங்களில், எங்கு பணத்தை போட்டால் பாதுகாப்பாக இருக்கும் என பலரும் யோசிப்பார்கள். இப்படி யோசிக்கும்போது, கண் முன் வரும் முதல் ஆப்ஷன் தங்கம்தான். எல்லோரும் தங்கத்தில் முதலீடு செய்தால் விலை அதிகமாகும். ஆனால், தற்போதைய மேற்கு ஆசிய மோதலின்போதும் இந்தியாவில் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரிக்காமல் மந்தமாகவே உள்ளது.
- குறைந்த தேவை
- அமெரிக்க டாலரின் வலிமை
- அதிக வட்டி விகிதங்கள்
- விநியோக உபரி
- மற்றும் வளைகுடா தங்க வர்த்தகத் தடங்கல்கள்
ஏன் விலை உயரவில்லை?
இது 4ம் தான் தங்கம் பெரிய அளவுக்கு விலை உயராமல் இருப்பதற்கு காரணம். அமெரிக்க டாலரின் வலிமையே முக்கிய காரணி. சர்வதேச அளவில் தங்கம், அமெரிக்க டாலரில்தான் விற்பனை செய்யப்படுகிறது. டாலர் மதிப்பு உயர்ந்தால், தங்கம் இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாடுகளுக்கு அது விலை உயர்ந்ததாகி, வாங்கும் ஆர்வத்தைக் குறைக்கிறது. எனவேதான் தற்போது தங்கம் விலை உயரவில்லை.
தங்கத்துக்கு மாற்று
மறுபுறம் போர், கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி, உலகளாவிய பணவீக்க அச்சத்தை தூண்டுகிறது. பணவீக்கம் அதிகரிக்கும்போது, மத்திய வங்கிகள் (அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் உட்பட) விலைகளைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்துகின்றன. எனவே தங்கத்தில் காசு போடுவதை விட, பாண்டு பத்திரங்களில் காசு போட்டால், அதிக வட்டி கிடைக்கும். எனவேதான் முதலீட்டாளர்கள் தங்கத்தை விட பத்திரங்களில் முதலீடு செய்கிறார்கள்.
இந்தியாவின் நிலைமை
இந்தியாவில், கடந்த ஆண்டில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்ததால், நகைத் தேவை பலவீனமாகியுள்ளது. இந்த விலை உயர்வு வாங்குபவர்களுக்கு தங்கத்தை கட்டுப்படியாகாதாக மாற்றிவிட்டது. நடப்பாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட அதிக இறக்குமதிகளால், நகைக்கடைக்காரர்களிடம் போதுமான இருப்பு உள்ளது. இது தற்காலிக விநியோக உபரியை உருவாக்கியுள்ளது.
போக்குவரத்து தடங்கல்
வளைகுடாவில் ஏற்பட்ட போக்குவரத்துத் தடங்கல்களும் சந்தையைப் பாதித்தன. உலகின் முக்கிய தங்க வர்த்தக மையமான துபாய், போர் காரணமாக விமானம் மற்றும் சரக்கு போக்குவரத்து பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கிறது. எனவே பலரும் தங்கத்தை தள்ளுபடி விலையில் விற்று வருகின்றனர்.
ஒட்டுமொத்தமாக, ஒவ்வொரு போரின் போதும் தங்கத்தின் விலை உயராது என்பதை இச்சம்பவம் காட்டுகிறது. அமெரிக்க டாலரின் வலிமை, அதிக வட்டி விகிதங்கள், பலவீனமான நகைத் தேவை மற்றும் இந்தியாவில் உபரி விநியோகம் ஆகியவை புவிசார் அரசியல் மோதல்களால் தங்கம் விலை உயராமல் இருக்கிறது.
-
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க 20,000 கி.மீ தூரத்திலிருந்து உதவும் இந்திய நட்பு நாடு! -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
ஈரான் போரால்.. எமெர்ஜென்சியை அறிவித்த ஆசிய நாடு! அடுத்து இந்தியாதான்! எச்சரிக்கும் நிபுணர்கள் -
Dubai Real Estate: துபாயில் வீடு வாங்க போறீங்களா? கவனிக்க வேண்டியவை என்னென்ன?












Click it and Unblock the Notifications