Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பத்திரப்பதிவில் நாளை முதல் ரூல்ஸ் மாறுது! லட்சங்களை மிச்சப்படுத்த பொன்னான வாய்ப்பு! இதை முடிச்சிடுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் ரியல் எஸ்டேட் சந்தையில் நிலம் மற்றும் வீடு வாங்கக் காத்திருப்பவர்கள் தற்போது ஒருவித பதற்றமான சூழலை எதிர்கொண்டுள்ளனர். ஆம், நாளை ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய மாற்றங்கள் சொத்து வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் மிகப்பெரிய சவாலாக அமையப்போகின்றன. குறிப்பாக, நிலத்தின் வழிகாட்டி மதிப்பில் அரசு கொண்டு வரவுள்ள திருத்தங்கள் சாதாரண நடுத்தர மக்களின் பட்ஜெட்டைத் தலைகீழாக மாற்றக்கூடியவையாக உள்ளன.

கடந்த சில வருஷங்களாகவே பெரிய மாற்றங்கள் எதுவுமில்லாமல் இருந்த பல பகுதிகளின் வழிகாட்டி மதிப்பை, தற்போதைய திறந்தவெளி சந்தை விலைக்கு இணையாக உயர்த்த நம்முடைய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

Tamil Nadu Property Registration Guideline Value Hike 2026 Stamp Duty Savings March 31 Deadline DTCP CMDA New 2026

இந்த உயர்வு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்பதால், அதற்கு முன்னதாகவே பத்திரப்பதிவை முடிக்க மக்கள் சார் பதிவாளர் அலுவலகங்களில் குவிந்தபடி உள்ளனர்..

பத்திரப்பதிவு

உதாரணமாக, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்திற்குப் பழைய மதிப்பீட்டின்படி முத்திரைத் தீர்வை செலுத்தியவர்கள், ஏப்ரல் 1-க்குப் பிறகு அதே நிலத்திற்குப் பல லட்சங்கள் கூடுதலாகச் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள். இது ஒரு குடும்பத்தின் வாழ்நாள் சேமிப்பில் பெரும் பகுதியைச் சுரண்டிவிடும் என்பதால், இன்று மார்ச் 31-க்குள் பதிவை முடிப்பதே பொருளாதார ரீதியாகப் புத்திசாலித்தனமான முடிவாகும்.

மேலும், இந்த மாற்றங்களுடன் தானியங்கி பட்டா மாறுதல் (Automatic Patta Transfer) முறையிலும் சில மேம்பாடுகளை அரசு கொண்டு வருகிறது. இது பார்ப்பதற்கு எளிய நடைமுறையாகத் தெரிந்தாலும், இதில் மறைந்துள்ள நுணுக்கமான சிக்கல்களை பொதுமக்கள் கவனிக்க வேண்டியது அவசியம்.

பழைய ஆவணங்கள்

ஒருவேளை, உங்களது நிலத்தின் வில்லங்க சான்றிலோ அல்லது பழைய ஆவணங்களிலோ கணினிப் பதிவேற்றத்தின் போது ஏதேனும் பிழைகள் இருந்தால், இந்தத் தானியங்கி முறை உங்களுக்குப் பலன் தராது. மாறாக, வருவாய்த் துறையினரைத் தேடி அலைந்து சரி செய்ய வேண்டிய சூழல் உருவாகும். எனவே, இந்த ஒரு வார காலத்தைப் பயன்படுத்தி உங்கள் சொத்து விவரங்கள் ஆன்லைனில் சரியாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்துவது வருங்கால சட்ட சிக்கல்களை தவிர்க்க உதவும்.

இன்னொரு முக்கியமானமான எச்சரிக்கை என்னவென்றால், டிடிசிபி (DTCP) மற்றும் சிஎம்டிஏ (CMDA) அங்கீகாரம் இல்லாத மனைகள் மீதான பிடி இறுக்கப்பட உள்ளது. முறையான அனுமதி பெறாத இடங்களை இனி பதிவு செய்வது ஏறக்குறைய சாத்தியமற்ற ஒன்றாக மாறப்போகிறது. குறைந்த விலைக்குக் கிடைக்கிறது என்பதற்காக அவசரகதியில் அங்கீகாரம் இல்லாத நிலங்களை வாங்கிப் பணத்தை முடக்க வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

டோக்கன் முன்பதிவு

இந்த மார்ச் மாத இறுதி என்பது வெறும் காலக்கெடு மட்டுமல்ல, அது உங்கள் நிதிப் பாதுகாப்பிற்கான ஒரு வாய்ப்பு. நிலத்தின் வழிகாட்டி மதிப்பு உயரும் போது, அது மறைமுகமாகப் பத்திரப் பதிவு தொடர்பான அனைத்துக் கட்டணங்களையும் உயர்த்தும். அதனால் ஏற்கனவே டோக்கன் முன்பதிவு செய்திருப்பவர்கள் எந்தவிதமான தாமதமும் இல்லாமல் பணிகளை முடிக்க வேண்டும்.

அதேசமயம், அவசரத்தில் ஆவணங்களைச் சரியாகச் சரிபார்க்காமல் கையெழுத்திடுவதும் ஆபத்தானது. தகுந்த சட்ட வல்லுநர்களின் ஆலோசனையுடன், இன்றைய நாளை சரியாக பயன்படுத்திக் கொள்வது உங்கள் கடின உழைப்பால் சேர்த்த பணத்தை மிச்சப்படுத்தும் சிறந்த வழியாகும்....!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+