"நம்பர் 1".. உலகிலேயே முதல்முறையாக..அதுவும் நம்ம தேனியிலேயே.. அட "நெல்லு மூட்டை".. சபாஷ் மத்திய அரசு
சென்னை: இந்தியாவிலேயே, ஏன் உலகிலேயே.. அசத்தலான காரியத்தை மத்திய அரசு செய்துள்ளது.. இதனால் தமிழகத்தின் பெருமை தேசிய அளவில் உயருகிறது. என்ன தெரியுமா?
இந்திய உணவுக்கழகமானது, விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்கிறது.. தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் நெல்கொள்முதல் செய்கிறது..
வீணா போச்சே: ஆனால், பல்வேறு இடங்களில் போதிய கிடங்கு வசதி இல்லை.. இதனால், தானியங்கள் திறந்த வெளியிலேயே வைக்கப்படுகின்றன. இப்படி திறந்தவெளியில் நெல் மூட்டைகள் வைக்கப்படுவதால், அவைகள் மழையின்போது, நனைந்து வீணாகிவிடுகின்றன.. இங்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் இதே நிலைமைதான்.
பாடுபட்டு உழைத்த நெல் மூட்டைகள் வீணாகிவிடுவதால், விவசாயிகள் பெருத்த துயருற்றனர்.. விவசாயிகள் 33 கோடி டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்து வரும் நிலையில், 14.50 கோடி டன் கொள்ளளவு உடைய சேமிப்பு கிடங்குகளே உள்ளன. நெல் மூட்டைகளை சேமித்து வைக்க போதிய கிடங்கு வசதி இல்லை என்பதாலேயே பெருத்த நஷ்டமும் ஏற்பட்டு வருகின்றன.
சேமிப்பு கிடங்குகள்: இதை தடுக்கவே, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காகவே, மத்திய கூட்டுறவு அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் 7 கோடி டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட உள்ளதாக அறிவித்தது.. இதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதிக்கும், கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு ஒப்புதல் தந்திருந்தது..

வேளாண் அமைச்சகம் மற்றும் உணவு, பொது வினியோக அமைச்சகம் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து கூட்டுறவு அமைச்சகம் சார்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அந்தவகையில், இதற்கான நிதி, வேளாண் உள்கட்டமைப்பு நிதியம், வேளாண் சந்தைப்படுத்துதல் திட்டம், ஒருங்கிணைந்த தோட்டக்ககலை வளர்ச்சி இயக்கம், பிரதமரின் வேளாண் மேம்பாட்டு திட்டங்களின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
தேனி மாவட்டம்: முதல் கட்டமாக நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் இந்த திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளதாம்.. அதில் ஒன்றாக தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டி தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக, 1000 டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்கு கட்டப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. இதற்காக 4 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு 1 ஏக்கரில் கிடங்கு கட்டுவதற்கான வரைபடமும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தை தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் துணை நிறுவனமான நாப்கான் ஆய்வு செய்துள்ளது. விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்ததும் ரூ.2 கோடி செலவில் சாலைப் போக்குவரத்து உள்பட அனைத்து வசதிகளுடன் கூடிய கிடங்கு கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து, போடி மற்றும் சில்லமரத்துப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் உணவு தானியங்கள் இருப்பு வைக்கப்படும்.
இப்படி, ஒவ்வொரு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் வாயிலாக கிடங்கு அமைக்கப்படுவதால் நாடு முழுவதும் பரவலாக சேமிப்பு வசதிகள் கிடைக்கும். விவசாயிகள் விளைவிக்கும் தானியங்கள் உள்ளூரிலேயே உடனுக்குடன் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்படும்... தானியங்கள் வீணாவது தடுக்கப்படுவதுடன் விவசாயிகளுக்கு போக்குவரத்து செலவும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
நிறைய லாபம்: மேலும் விளை பொருட்களுக்கும் நல்ல விலை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும், விவசாயிகள் விளைவிக்கும் தானியங்கள், உள்ளூரிலேயே உடனுக்குடன் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்படும்.. அத்துடன், தானியங்கள் வீணாவதும் தடுக்கப்படும்.. இந்திய உணவு கழகத்தின் சுமையும் குறையும்... விவசாயிகளுக்கும் போக்குவரத்து செலவும் குறைந்து, விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
உலக கவனம்: உலகிலேயே மிகப்பெரிய உணவு தானிய சேமிப்பு வசதியை ஏற்படுத்தும் நோக்கில், நாடு முழுதும் கூட்டுறவு சங்கங்கள் சார்பில், சேமிப்பு கிடங்குகள் கட்ட, மத்திய கூட்டுறவு அமைச்சகம் திட்டமிட்டு வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications