Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு போறீங்களா.. இன்று எஸ்இடிசி உங்களுக்காக வெளியிட்ட குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் செப்டம்பர் 2-ம் தேதி (சனிக்கிழமை), செப்டம்பர் 3 (ஞாயிறு) சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 1) சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வார இறுதிகளில் ஊருக்கு செல்வதே இப்போது பெரிய விஷயம் ஆகிவிட்டது. குறிப்பாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு போகவும், திரும்ப சென்னை வரவும் தமிழக அரசு விடும் சிறப்பு பேருந்துகள் தான் கைகொடுக்கின்றன.

Good News for Chennai people : SETC announced special bus from chennai to main cities of tamilnadu

பொதுவாக வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளை சொந்த ஊரில் கழிக்க பலர் விரும்புகிறார்கள். பிழைப்புக்காக சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வரும் மக்கள் சுபமுகூர்த்த தினங்கள், விடுமுறைதினங்களில் கண்டிப்பாக சொந்த ஊருக்கு செல்வதையே விரும்புவார்கள்.

ஆனால் வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாட்களில் ஆம்னி பேருந்துகளில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு டிக்கெட் கட்டணம் இருக்கும். ரயிலில் 3 மாதத்திற்கு முன்பே டிக்கெட்டும் கிடைப்பது இல்லை.. அரசு பேருந்துகளிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்திருக்கும். இப்படியான சூழலில் திடீரென விஷேசங்கள் மற்றும் மருத்துவ சூழலுக்காக அல்லது ஏதேனும் காரணத்திற்காக ஊருக்கு செல்லும் மக்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அரசுவிடும் சிறப்பு பேருந்துகள் தான்.

அந்த வகையில் ஒவ்வொரு வார இறுதியிலும் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை அறிவித்து வருகிறது. சென்னை கோவை, திருப்பூர், பெங்களூரு, சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து திருச்சி, நாமக்கல், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அந்த வகையில் இன்று சென்னையில் இருந்தும் பிற நகரங்களில் இருந்தும் சொந்த ஊர் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

Good News for Chennai people : SETC announced special bus from chennai to main cities of tamilnadu

இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகமேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: வரும் 2-ம் தேதி (சனிக்கிழமை), செப்.3 (ஞாயிறு) சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று (செப்.1) சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 200 சிறப்புப் பேருந்துகள் மற்றும் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 400பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், ஞாயிறன்று சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+