சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு போறீங்களா.. இன்று எஸ்இடிசி உங்களுக்காக வெளியிட்ட குட்நியூஸ்
சென்னை: வரும் செப்டம்பர் 2-ம் தேதி (சனிக்கிழமை), செப்டம்பர் 3 (ஞாயிறு) சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 1) சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வார இறுதிகளில் ஊருக்கு செல்வதே இப்போது பெரிய விஷயம் ஆகிவிட்டது. குறிப்பாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு போகவும், திரும்ப சென்னை வரவும் தமிழக அரசு விடும் சிறப்பு பேருந்துகள் தான் கைகொடுக்கின்றன.

பொதுவாக வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளை சொந்த ஊரில் கழிக்க பலர் விரும்புகிறார்கள். பிழைப்புக்காக சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வரும் மக்கள் சுபமுகூர்த்த தினங்கள், விடுமுறைதினங்களில் கண்டிப்பாக சொந்த ஊருக்கு செல்வதையே விரும்புவார்கள்.
ஆனால் வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாட்களில் ஆம்னி பேருந்துகளில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு டிக்கெட் கட்டணம் இருக்கும். ரயிலில் 3 மாதத்திற்கு முன்பே டிக்கெட்டும் கிடைப்பது இல்லை.. அரசு பேருந்துகளிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்திருக்கும். இப்படியான சூழலில் திடீரென விஷேசங்கள் மற்றும் மருத்துவ சூழலுக்காக அல்லது ஏதேனும் காரணத்திற்காக ஊருக்கு செல்லும் மக்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அரசுவிடும் சிறப்பு பேருந்துகள் தான்.
அந்த வகையில் ஒவ்வொரு வார இறுதியிலும் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை அறிவித்து வருகிறது. சென்னை கோவை, திருப்பூர், பெங்களூரு, சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து திருச்சி, நாமக்கல், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அந்த வகையில் இன்று சென்னையில் இருந்தும் பிற நகரங்களில் இருந்தும் சொந்த ஊர் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகமேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: வரும் 2-ம் தேதி (சனிக்கிழமை), செப்.3 (ஞாயிறு) சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று (செப்.1) சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 200 சிறப்புப் பேருந்துகள் மற்றும் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 400பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும், ஞாயிறன்று சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications