ஓடும் தொழிலாளர்களுக்கு ரயில்வே குட் நியூஸ்: பிப்ரவரி சம்பளத்தில் கி.மீ. அலவன்ஸ் ஜாக்பாட்
சென்னை: ரயில்வே ஓடும் தொழிலாளர்களுக்கு பிப்ரவரி மாத சம்பளத்துடன் கி.மீ., அலவன்ஸ் வழங்கப்படும் என ரயில்வே வாரியம் முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.. இந்த முடிவின் மூலம் லோகோ பைலட்டுகள் மற்றும் கார்டுகளின் வாழ்வாதாரமும் அவர்களின் நியாயமான வருமானமும் பாதுகாக்கப்படுகிறது.. இது தொழிலாளர்களுக்கு மிகுந்த குஷியை தந்து வருகிறது..
இந்திய ரயில்வேயில் என்ஜின் டிரைவர்கள் அதாவது லோகோ பைலட்டுகள் மற்றும் கார்டுகள் போன்ற பணியாளர்கள் "ஓடும் தொழிலாளர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள்..

இவர்களது பணி என்பது சாதாரண அலுவலகப் பணி போன்றது கிடையாது.. ரயில்களை ஓட்டிச் செல்லும் தூரத்தின் அடிப்படையில் இவர்களுக்கு கி.மீ. அலவன்ஸ் எனப்படும் மைலேஜ் படி வழங்கப்படுகிறது..
ரயில்வே தொழிலாளர்கள்
இது அவர்களது ஒட்டுமொத்த வருமானத்தில் ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது.. நாட்டின் போக்குவரத்து முதுகெலும்பாக விளங்கும் ரயில்களை இரவு பகல் பாராமல் இயக்கும் இந்தத் தொழிலாளர்களின் உழைப்பிற்கு இந்த அலவன்ஸ் ஒரு முக்கிய அங்கீகாரமாகும்..
தற்போதைய சூழலில், நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் செலவினக் கணக்குகளை காரணம் காட்டி, ரயில்வே ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத சம்பளத்தில் வழக்கமான சில அலவன்சுகள் வழங்கப்படாது என்று ஒரு தகவல் வெளியானது.. குறிப்பாக ஓடும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கி.மீ. அலவன்ஸும் இதில் நிறுத்தி வைக்கப்படலாம் என்ற சூழல் உருவானது..
ஊதியம், சம்பளம்
இந்தச் செய்தி ரயில்வே ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.. தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான ஊதியப் பலன்கள் குறைக்கப்படுவதால் தொழிலாளர்கள் மிகுந்த கவலையடைந்தனர்..
இந்த இக்கட்டான நிலையில், தெற்கு ரயில்வே தொழிலாளர் சங்கமான எஸ்.ஆர்.எம்.யூ. இந்த விவகாரத்தில் தலையிட்டது.. அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கண்ணையா, ரயில்வே வாரியத்திடம் இது குறித்து விரிவாகப் பேசினார்..
அலவன்ஸ் ரயில்வே வாரியம்
ஓடும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மைலேஜ் படியை நிறுத்தினால் அது அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், ரயில் சேவைகளிலும் தேவையற்ற இடையூறுகளை உருவாக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.. தொழிலாளர்களின் உணர்வுகளையும் பணியின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டி இந்த முடிவை கைவிடக் கோரினார்..
சங்கத்தின் இந்தப் போராட்டத்திற்கும் கோரிக்கைக்கும் தற்போது செம பலன் கிடைத்துள்ளது.. ரயில்வே வாரியம் தனது முந்தைய முடிவை மாற்றிக்கொண்டு, ஓடும் தொழிலாளர்களுக்கு பிப்ரவரி மாத சம்பளத்துடன் வழக்கம்போல கி.மீ. அலவன்ஸ் வழங்கப்படும் என்று தற்போது உறுதி அளித்துள்ளது..
வருமானம் பெரிய நிம்மதி
இது குறித்து மதுரை கோட்ட நிர்வாகிகள் ரபீக் மற்றும் ராம்குமார் ஆகியோர் சொல்லும்போது, தொழிலாளர்களின் நியாயமான வருமானம் இதன் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.. அதே சமயம், மற்ற ரயில்வே ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய இரவு நேரப் படி போன்ற பிற அலவன்சுகளையும் முழுமையாகப் பெற்றுத் தர தொடர்ந்து போராடப் போவதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்..
மொத்தத்தில் இந்த அறிவிப்பு ரயில்வே ஊழியர்களுக்கு ஒரு பெரிய நிம்மதியைத் தந்துள்ளதோடு, ரயில் சேவைகள் தடையின்றி இயங்குவதையும் உறுதி செய்துள்ளது..
தொழிலாளர்களுக்கு குட் நியூஸ் ஜாக்பாட்
இந்த அலவன்ஸ் வழங்கப்படுவதால் ஓடும் தொழிலாளர்களின் வருமானம் காக்கப்பட்டு, அவர்கள் உற்சாகத்துடன் பணியாற்ற வழிவகுக்கிறது.. இது அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்கிறது.. அரசுக்கு தொழிலாளர் அதிருப்தியால் ஏற்படக்கூடிய வேலைநிறுத்தம் மற்றும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது..
நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே இணக்கமான சூழல் உருவானதால், நாட்டின் ரயில் போக்குவரத்து தடையின்றி இயங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது..!!
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications