அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ்.. தமிழக ஆசிரியர்களுக்கும் குட்நியூஸ்.. எல்லா வசதியும் இதுல இருக்கா? செம
சென்னை: அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இது தொடர்பான அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, கட்டாயமாக ஒவ்வொரு மாதமும், வருமான வரி பிடித்தம் செய்யும் புது நடைமுறையாக உள்ளது.. விருப்பம் போல வருமான வரி பிடித்தம் செய்யும் நடைமுறையை தமிழக அரசு கைவிடுகிறது.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஊதியப்பட்டியல் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருளான "ஐஎப்எச்ஆர்எம்எஸ்" என்ற நிதித்துறையின் சாஃப்ட்வேர் வாயிலாக தயாரிக்கப்பட்டு, அதன்படியே வழங்கப்பட்டும் வருகிறது..
புதிய சாப்ட்வேர் இந்த சாஃப்ட்வேரை பயன்படுத்தியே, இந்த வருடம் முதல் வருமான வரிப்பிடித்தமும் கணக்கிடப்படுகிறது.. அத்துடன் சம்பள பிடித்தமும் செய்யப்படுகிறது.. ஆனால், சமீபத்தில், இந்த IFHRMS சாப்ட்வேர் மூலம் தயாரிக்கப்பட்ட சம்பளப் பட்டியலில், அதிகளவில் வருமான வரிப்பிடித்தம் செய்யும் வகையில் தொகை குறிப்பிடப்பட்டிருந்ததாம். குறிப்பாக, மாதம் ரூ.9 ஆயிரம் வீதம் வரியை பிடித்தம் செய்யும் வகையில் அந்த சாப்ட்வேரில் கணக்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது.
எனவே, இதுகுறித்து தலைமை செயலக சங்கம் சார்பில் தமிழக நிதித்துறை செயலாளர் உதயசந்திரனிடம் இது தொடர்பாக மனு தரப்பட்டது.. இதனிடையே, புதிய மென்பொருள் வழியே வருமான வரி பிடித்தம் செய்வதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கும் தலைமை செயலக சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
வைப்பு நிதி: இது ஒருபக்கமிருந்தாலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்களின் 2023 - 24ம் வருடத்துக்கான பொது வருங்கால வைப்பு நிதி விபரத்தை அறிந்து கொள்ள இணையதளம் வசதி புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதுநிலை மாநில கணக்காயர் கார்த்திக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், "தமிழக அரசு பணி நிலை சார்ந்த, அனைத்து மத்திய அரசு சேவை அதிகாரிகள், தமிழக அரசு ஊழியர்கள், ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், சென்னை, மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஆகியோரின், 2023 - 24ம் ஆண்டுக்கான பொது வருங்கால வைப்பு நிதி, வருடாந்திர கணக்கு விபர அறிக்கை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
டவுன்லோடு: மாநில முதன்மை கணக்காயர் அலுவலகத்தின், http://cag.gov.in/ae/tamilnadu/en இணையதளத்தில், அதிகாரிகள், சந்தாதாரர்கள் தங்களின் கணக்கு விபர அறிக்கையை, "online services - want to know your GPF status"ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" எனறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications