அடுத்தடுத்து அதிரடி.. தமிழ்நாட்டில் மேலும் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. அரசு உத்தரவு
சென்னை: தமிழகத்தில் மேலும் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக இருந்த மோகன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வு துறையின் ஆணையர் ஜெயகாந்தன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக அரசு உயர் அதிகாரிகள் அவ்வப்போது இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் உள்துறை செயலாளராக இருந்த அமுதா, சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் உள்பட அரசின் உயர் அதிகாரிகள் பலரும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் மேலும் 25 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் விவரம் வருமாறு:-
* முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக இருந்த மோகன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குநராக மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வு துறையின் ஆணையர் ஜெயகாந்தன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகா நியமனம்.
* ஜவுளித்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ஜெயகாந்தன் நியமனம்.
* மீன்வளத்துறை மேலாண் இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரி கெஜலட்சுமி பணியிட மாற்றம்.
* இந்து அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக மாற்றம்.
* இந்து அறநிலையத்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதர் நியமனம்.
* கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், இந்து அறநிலையத்துறை ஆணையராக மாற்றம்.
* நெல்லை மாநகராட்சி ஆணையர் தாகரே சுபம், வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றம்.
*டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி அதிஷ் குமார் நியமனம்.
* புதுக்கோட்டை ஆட்சியர் மெர்சி ரம்யா, ஒருங்கிணைந்த குழந்தைகள் நலன் திட்ட இயக்குநராக மாற்றம்.
* நாகை ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், குழந்தைகள் நலன் திட்ட இயக்குநராக மாற்றம்.
* கடலூர் ஆட்சியர் அருண் தம்பு ராஜ், தமிழ்நாடு சுகாதார அமைப்பின் திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
* சமூக சீர்திருத்த துறை செயலாளராக இருந்த ஆப்ரஹாம் தொழில்நுட்ப கல்வி இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* போக்குவரத்த்து துறை ஆணையராக இருந்த சண்முகசுந்தரம் கைத்தறித்துறை இயக்குனராக மாற்றம்.
* போக்குவரத்து துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி கஞ்சோங்கம் ஜடக் சிரு நியமனம்.
* ஊரக வளர்ச்சி துறை இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரி சரண்யா நியமனம்.
* கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக ஐஏஎஸ் அதிகாரி காயத்ரி கிருஷ்ணன் பணியிட மாற்றம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications