அரசு ஊழியர்களுக்கு 3வது பிரசவத்திற்கும்.. ஊதியத்துடன் கூடிய விடுப்பு! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் மக்கள் தொகை எண்ணிக்கை தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், 3வது பிரசவத்திற்கும் முழு சம்பளத்துடன் கூடிய விடுப்பை வழங்கிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
ஆனால், இந்த விடுப்பு அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், பெரும்பான்மையாக இருக்கும் தனியார் நிறுவன ஊழியர்கள் வழக்கம் போல வேலையை இழக்கும் சூழலே உருவாகியிருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும், பி.மங்கையர்க்கரசி என்பவர்.. தனது 3வது பிரசவத்திற்காக ஊதியத்துடன் கூடிய விடுப்பு கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், தமிழக அரசு பணியாளர் விதிகளில் இது போன்ற பிரசவ விடுப்புக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. எனவே இந்த விவகாரம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தது.
வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, பெண் ஊழியர்கள் தங்கள் 3வது பிரசவத்திற்கும், சம்பளத்துடன் கூடிய முழுமையான பேறுகால விடுப்பை பெற தகுதி உடையவர்கள் என்று உத்தரவிட்டது.
மகப்பேறு நலன் மற்றும் குழந்தைகளின் பராமரிப்பை கருத்தில் கொண்டு, இந்த விடுப்பு மறுக்கப்படக்கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பின் நகலை தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்களுக்கும் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும், நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications