தமிழகத்தில் இருமொழிக் கொள்கை நீடிக்கும்...ஆளுநர் உறுதி
சென்னை : இருமொழிக் கொள்கை தொடர்ந்து நீடிக்கும் என தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாளில் உரையாற்றி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
Recommended Video

மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட புதிய கல்வி கொள்கையில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும் என கூறப்பட்டிருந்தது. மேலும் மூன்றாவது மொழியை மாநிலங்களே தேர்வு செய்து கொள்ளலாம் என கறிப்பிடப்பட்டது. ஆனால் இது மறைமுகமாக இந்தியை திணிக்கும் செயல் என பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

தமிழகத்தில் பாஜக தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசின் மும்மொழி கொள்கையை எதிர்த்தன. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே கடைபிடிக்கப்படும் என முதல்வர் டெப்பாடி பழனிசாமி கூறி இருந்தார்.
இதனை உறுதிப்படுத்துவதாக இன்று சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாளில் உரையாற்றிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications