முதல்வருக்கு மட்டுமே அதிகாரம்..இலாகா மாற்றம் பற்றி சட்டம் சொல்வது அதுதான்..சபாநாயகர் அப்பாவு
சென்னை: அமைச்சரவையில் யாருக்கு எந்த துறையை ஒதுக்குவது என்ற அதிகாரம் முதல்வருக்கு மட்டுமே உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். வழக்கு இருப்பதாலேயே ஒருவரை அமைச்சரவையில் இருந்து நீக்கத் தேவையில்லை. நீதிமன்ற காவல், வழக்கு நிலுவையில் இருந்தால் அமைச்ச பதவியில் இருக்கக்கூடாதென சட்டத்தில் இல்லை என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இதய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதயத்தில் 90 சதவிகித அடைப்பு உள்ளதால் காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி வகித்த துறைகளை பிற அமைச்சர்களுக்கு மாற்ற ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்தார். முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்காமல், முதலமைச்சரின் பரிந்துரை கடிதத்திற்கு விளக்கம் கேட்டு ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார். பரிந்துரை கடிதத்தில் முதலமைச்சரின் காரணத்தை "Misleading & Incorrect" என ஆளுநர் ஏற்க மறுத்தார்.
செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருப்பதை ஏன் குறிப்பிடவில்லை என்றும் வினவியிருந்தார். ஆளுநர் ஆர்.என்.ரவி செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வலுத்து வருகிறது. முதலமைச்சரின் அதிகாரத்தை பறிக்க முயல்வதா என்று அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சரவை மாற்றம் குறித்து ஆளுநர் கேட்டுள்ள விளக்கம் குறித்து சபாநாயகர் அப்பாவுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, அரசியல் சட்டத்திற்கு விரோதமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என்று கூறினார். அமைச்சர்களின் இலாகாவை மாற்ற முதலமைச்சருக்கே அதிகாரம் உள்ளது. முதலமைச்சரின் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது, சட்டம் அதைத்தான் சொல்கிறது என்றும் தெரிவித்தார்.
முதல்வரின் பரிந்துரையை ஆளுநர் திருப்பி அனுப்பியது தேவையற்றது, தவிர்த்திருக்கலாம். யாருக்கு என்ன துறை என்பதை முடிவு செய்யும் அதிகாரம் முதல்வருக்கே உள்ளது. வழக்கு இருப்பதாலேயே ஒருவரை அமைச்சரவையில் இருந்து நீக்கத் தேவையில்லை. நீதிமன்ற காவல், வழக்கு நிலுவையில் இருந்தால் அமைச்சர் பதவியில் இருக்கக்கூடாதென சட்டத்தில் இல்லை என்றும் கூறினர். குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்டால் மட்டுமே அமைச்சரவையில் இருந்து நீக்க முடியும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
-
கோவையின் இதயப் பகுதியில் ஏற்பட போகும் மாற்றம்.. செந்தில் பாலாஜி ஷார்ப் திட்டம் -
“கட்சியால் புறக்கணிக்கப்பட்டவர்”.. கரூர் ரோபோக்கள் என விமர்சித்த அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications