Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமரின் புராண கதைகள்.. ராமேஸ்வரம் முதல் ஸ்ரீரங்கம் வரை ஆலய தூய்மைப்பணி.. ஆளுநர் ரவி நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி ராமாயண இதிகாசத்துடன் தொடர்புடைய ஆலயங்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளார். ராமேஸ்வரத்திலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலும் தூய்மை பணி செய்துள்ளார் ஆளுநர் ஆர்.என். ரவி.

ஆலயங்களை தூய்மை செய்வது என்பது அற்புதமான சேவை. அந்த பணியை சமீபத்தில் ராமர் ஆலயத்தில் தொடங்கினார் பிரதமர் மோடி. அவரைத் தொடர்ந்து பலரும் ஆலயத்தூய்மை பணியை செய்து வருகின்றனர். தமிழக ஆளுநர் ஆளுநர் ஆர்.என். ரவி, பகவான் ஸ்ரீராமர் தொடர்புடைய ஆலயங்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக ஆன்மீக பயணம் மேற்கொண்டார்.

Governor RN Ravi darshan and Pooja in Rameswaram and Srirangam

முதல்வர் அவர் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணிக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்ததோடு அந்த ஆலயத்தின் சிறப்புகளை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ராமேஸ்வரம் அருகே உள்ள திருப்புல்லாணியில் தசரத மன்னர் புத்திர காமேஷ்டி பூஜை மற்றும் தர்பசயனத்தில் பிரபு ஸ்ரீ ராமர் இருக்கும் ஸ்ரீ ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயிலில் தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றேன்.

இங்கு தர்பையில் சயன கோலத்தில் ஓய்வெடுத்தபோதுதான் பிரபு ஸ்ரீ ராமர், இலங்கைக்கு பாலத்தை கட்ட முடிவெடுத்தார். இப்பகுதி முழுவதும் ஸ்ரீ ராமரின் புராண கதைகளால் நிரம்பியுள்ளது. அயோத்தியில் பிரமாண்டமான பிரபு ஸ்ரீராமர் கோயிலின் திறப்பு விழா ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் உள்ளூர் மக்களிடையே முழு அளவிலான உற்சாகம் நிலவுகிறது.

நமது பன்முக மக்கள் மற்றும் இடங்களுக்கு மத்தியில் ஒரே குடும்பம் என்ற தீவிர உணர்ச்சிப் பிணைப்பு, பாரதத்தின் எண்ணத்தையும் அடையாளத்தையும் உருவாக்கி நிலைநிறுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதனையடுத்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.

ராமேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ ராமநாதசுவாமி கோயில் பிரகாரத்தைச் சுற்றி தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். இதனை ராஜ்பவன் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இங்குள்ள புனித சிவலிங்கத்தை பிரபு ஸ்ரீ ராமர் நிறுவி வழிபட்டார்.

ஆலய தூய்மைப் பணியில் தாமாக முன்வந்து பங்கேற்ற உள்ளூர் மக்களின் உற்சாகத்தைக் கண்டு நெஞ்சம் நெகிழ்கிறது. #ஒரேபாரதம் உன்னத பாரதம் என்ற நோக்கத்துடன் நாம் குதூகலிப்போம் என்று பதிவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீராமரின் குல தெய்வமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்கு சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி. பிரபு ஸ்ரீ ராமரின் எண்ணற்ற பக்தர்களுடன் அனைவரது நலனுக்காக ஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாதசுவாமி கோயிலில் வேண்டிக்கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டதோடு அந்த கம்பர் மணி மண்டபத்தின் சிறப்புகளை பதிவிட்டுள்ளார்.
கோயில் வளாகத்தில் தூய்மை சேவையில் ஈடுபட்டேன். பகவானிடம் முதல் முறையாக வழங்கப்பட்ட வால்மீகியின் ஆதி சமஸ்கிருத ராமாயணத்துக்குப் பிறகு ஸ்ரீ ராமரின் மிகச்சிறந்த பக்தர், அறிஞர் மற்றும் புலவரான கம்பர் தமிழில் ராமாயாணத்தை அரங்கேற்றிய கம்பர் மணி மண்டபத்தில் ஸ்ரீ ராம பக்தியின் ஆழத்தை அனுபவித்தேன். இவ்வாறு ஒட்டுமொத்த தேசமும் ராமமயத்தில் திளைப்பது ஒவ்வோர் இந்தியருக்கும் வரலாற்றுபூர்வ தருணமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் தேரெழுந்தூர் தேவாதிராஜன் கோயில் 23 வது திவ்ய தேசம் ஆகும். மூலவர் தேவாதிராஜன் 13 அடி உயரத்தில் சாளக்கிராமத்தால் ஆனவர். இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகும். இந்த ஊருக்கும் இன்று சென்றுள்ளார் ஆளுநர் ஆர்.என். ரவி.

ராமாயண காவியம் எழுதிய கவிச்சக்கரவர்த்தி கம்பரின் அவதாரத் தலமாகும். கம்பர், நரசிம்ம அவதாரம் பற்றி இங்குதான் பாடினார். கம்பருக்கும் அவர் மனையாளுக்கும் கோயிலுக்குள் சிலை எழுப்பியுள்ளனர். தர்மதேவதை, உபரிசரவசு, காவிரி, கருடன், அகத்தியர் ஆகியோர் இத்தலப் பெருமாளை தரிசனம் செய்துள்ளனர். இங்கு பெருமாள் ருக்மிணி, சத்தியபாமாவுடனும் பசுங்கன்றுகளுடனும், நான்கு திருக்கரங்களுடனும் ஸ்ரீ கிருஷ்ணனாக அருள்பாலிக்கிறார்.

"பிரபு ஸ்ரீராமரின் மிகப்பெரும் பக்தர்களில் ஒருவரான கம்பர், தமிழில் ராமாவதாரம் எழுதி, நடந்து, உழைத்த புண்ணிய பூமியான தேரழுந்தூரில் இருப்பது பாக்கியம். தமிழகத்தில் எங்கும் இருப்பதைப் போலவே இந்த இடமும் பிரம்மாண்டமாக வருவதைக் கண்டு உற்சாகமும், உற்சாகமும் கொண்டது என்று குறிப்பிட்டுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+