2.13 நிமிட வீடியோ.. குறுக்கே வந்த சனாதன தர்மம்.. தமிழில் பேசி ஆளுநர் ஆர்என் ரவி தீபாவளி வாழ்த்து!
சென்னை: தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தான் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி 2.13 நிமிடங்கள் தமிழில் பேசி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி தமிழ் மொழியில் பேசி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மொத்தம் 2.13 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் ஆளுநர் ஆர்என் ரவி பேசியதாவது:

வணக்கம், ஒளி திருநாளான தீபாவளி திருநாளில் எனது அன்புக்குரிய தமிழ் சகோதர, சகோதரிகளுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பாரதம் முழுவதும் கொண்டாடப்படும் இந்த விழா அதர்மத்தின் மீதான தர்மத்தின் வெற்றியையும், இருளின் மீது ஒளியின் வெற்றியையும் குறிக்கிறது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" அல்லது "வசுதெய்வ குடும்பகம்" என்ற நமது சனாதன தத்துவத்தின் இலட்சியங்களின் உண்மையான வெளிப்பாடு இது.
உலகெங்கும் உள்ள பாரதவாசிகள் மதம் அல்லது மொழி வேறுபாடின்றி ஒரு குடும்பமாக தீபாவளியை கொண்டாடுகிறார்கள். நமது அன்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி ‛ஆத்மநிர்பார் பாரத்'தை உருவாக்க நாம் அனைவரும் Vocal for Local ஆக வேண்டும் அறிவுறுத்தி உள்ளார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆடைகள், இனிப்புகள், பட்டாசுகள், பரிசு பொருட்களை வாங்க உறுதிமொழி ஏற்போம். சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, சாத்தூரில் உள்ள பட்டாசு மட்டும் தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு சென்றோம். நம் தீபாவளியை ஒளிரச்செய்ய பெண் தொழிலாளர்களின் உழைப்பை பார்த்தேன்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை வாங்கி அவர்களுக்கு உதவி நன்றியை தெரிவித்து கொள்வோம் மற்றும் அவர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்வோம். மீண்டும் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான, பாதுகாப்பான தீபாவளி வாழ்த்துகள். நன்றி'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications