கலைஞர் பல்கலைக்கழக மசோதா.. 3 மாதத்திற்கு பின் ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி!
சென்னை: கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறார். துணை வேந்தர் நியமனம், யுஜிசி விதிகள் தொடர்பான வழக்குகளைக் காரணம் காட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
சட்டசபையில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் கலைஞர் பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கும்பகோணம் மாவட்டத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதன்பின் கலைஞர் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் தாக்கல் செய்தார். அந்த சட்ட மசோதாவில் கலைஞர் பல்கலைக்கழகத்தின் வேந்தராக மாநில முதல்வர் இருப்பார். பல்கலைக்கழக தலைவராகவும், பட்டமளிப்பு விழா உள்ளிட்டவற்றில் தலைமையும் முதல்வர் இருப்பார். அதுமட்டுமல்லாமல் வேந்தரின் முன் அனுமதியின்றி, யாருக்கும் கவுரவ பட்டங்கள் வழங்க இயலாது.
பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக உயர் கல்வித்துறை அமைச்சர் செயல்படுவார். துணைவேந்தர் தேடல் குழுவில் வேந்தர் பிரதிநிதியாக உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி, அரசு பிரதிநிதியாக ஒரு கல்வியாளர் அல்லது முதல்மைச் செயலர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியும், சிண்டிகேட் பிரதிநிதியாக, மாநில அல்லது மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்ட கல்வியாளர்கள் இடம்பெறுவர்.
தொடர்ந்து, தேடல் குழுவால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படும் மூன்று பேர் பட்டியலில் இருந்து, துணைவேந்தரை வேந்தர் நியமிப்பார் உள்ளிட்ட ஷர்த்துக்கள் மசோதாவில் இருந்தன. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதா மீது எந்த முடிவும் எடுக்காமல் சுமார் 3 மாதங்களாக ஆளுநர் ஆர்.என்.ரவி வைத்திருந்தார்.
இந்த நிலையில் கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறார். துணை வேந்தர் நியமனம், யுஜிசி விதிகள் தொடர்பான வழக்குகளைக் காரணம் காட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications