தமிழ் பேரரசு கட்சியை தொடங்கினார் கவுதமன்.. தமிழக மக்களின் பேராதரவை பெறுவோம் என சூளுரை
சென்னை: தமிழ்ப் பேரரசு கட்சியை இயக்குநர் கவுதமன் சென்னை விருகம்பாக்கத்தில் தொடங்கி வைத்தார்.
தமிழ் திரைப்பட இயக்குநராக அறியப்படும் கவுதமன், மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்தார். பிற மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை ஊக்கப்படுத்தினார்.

விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வந்தவர் காவிரிப் படுகையில் ஓஎன்ஜிசி குழாய் பதிக்க முன்னெடுக்கும் முயற்சிகள், ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் எடுக்கும் திட்டம் என விவசாய நிலங்களை சுரண்டுவதற்காக போடப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் எதிராக போராடிய விவசாயிகளுக்கு களத்தில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
தமிழ் இன உணர்வு, தமிழர் நிலம் உரிமை என தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக செயல்பட்டு வந்த கவுதமன், தனது பொதுவாழ்க்கையை அரசியல் கட்சி மூலம் விஸ்திகரிப்பு செய்ய உள்ளதாக கடந்த நவம்பர் 11-ஆம் தேதி அறிவித்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் தமிழ்ப் பேரரசு என்ற கட்சியை சென்னை விருகம்பாக்கத்தில் அவர் தொடங்கி வைத்தார். கட்சிக் கொடியையும் அவர் வெளியிட்டார்.
இது தொடர்பாக கவுதமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக மக்களின் கலை, கலாச்சாரம், இயற்கை வளம், மொழி போன்ற உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகளுக்காக போராடி வருகிறோம். உரிமைகளை மீட்டெடுக்க அரசியல் எனும் ஆயுதத்தை கையில் எடுப்பதாகவும் தூய்மையான செயல்பாட்டால் தமிழக மக்களி பேராதரவை பெறுவோம்.
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம். இனம், மொழி, வளம் காக்க அரசியல் சக்தியாக உருவெடுக்கிறோம் என்றார் கவுதமன்.












Click it and Unblock the Notifications