இதுக்காக ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாதீர்கள் - நடிகை கௌதமி
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாமல் மற்றவர்களின் செயல்பாட்டையும் நாம் பார்க்க வேண்டும் என நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கு நல்ல தலைவர் வர வேண்டும் என்பதில் நடிகை கௌதமி அக்கறை காண்பித்து வருகிறார். மேலும் அவர் ஜெயலலிதா மரண விவகாரத்தையும் வெளிப்படையாக பேசினார். விசாரணைக்கு உத்தரவிடுமாறு பிரதமரிடம் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் இவர் தற்போதைய அரசியல் குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில் மக்களுக்காக உழைக்கும் தலைவரைத்தான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன். ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாமல் மற்றவர்களின் செயல்பாட்டையும் நாம் பார்க்க வேண்டும்.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்கள் ஒவ்வொன்றாக வெளி வருகிறது. அவரது மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார் கௌதமி.












Click it and Unblock the Notifications