திமுகவின் வெற்றிக்கு கைகொடுத்த கிராமசபை கூட்டங்கள்... ஸ்டாலின் மகிழ்ச்சி
சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை விட அதிக இடங்களில் திமுக வெற்றிபெற்றதற்கு ஊராட்சிகள் தோறும் மு.க.ஸ்டாலின் நடத்திய கிராமசபை கூட்டங்களே காரணமாகும்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கிராமம் கிராமமாக பயணித்த மு.க.ஸ்டாலின் அங்கு கிராம சபை கூட்டங்களை நடத்தி மக்களுடன் கலந்துரையாடினார்.
ஆனால், ஸ்டாலினின் இந்த முயற்சியை திமுக மாவட்டச் செயலாளர்கள் பலரும் புரியாத புதிராக அப்போது பார்த்த நிலையில் அவர்களுக்கு இப்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.

கலந்துரையாடல்
நாட்டிலேயே முதல்முறையாக ஒரு அரசியல் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் கிராமசபை கூட்டங்களை நடத்திய பெருமை திமுகவை சேரும். கிராமமக்களை சந்தித்து அவர்களின் மனதில் உள்ள நிறை குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் இந்த கூட்டங்களை நடத்தினார் மு.க.ஸ்டாலின்.

திமுக வெற்றி
கிராமப்புறங்களில் முதல்முறையாக அதிமுகவை காட்டிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது திமுக. எப்போது கிராமப்புறப் பகுதிகளில் அதிமுகவின் கையே ஓங்கி காணப்படும். ஆனால் ஸ்டாலின் நடத்திய கிராமசபைக் கூட்டம் அதிமுகவின் வாக்குவங்கியை உடைத்து திமுகவுக்கு வெற்றியை தேடி தந்துள்ளது.

விடை
தமிழகம் முழுவதும் திமுகவினர் கிராமசபை கூட்டங்களை நடத்த வேண்டும் என கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஸ்டாலின் அறிவித்த போது, அதனை மாவட்டச் செயலாளர்கள் பலரும் ரசிக்கவில்லை. இந்தக் கூட்டங்கள் வீண் செலவை ஏற்படுத்தும் என அப்போது பலரும் கமெண்ட் அடித்தனர். ஆனால் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவு ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வையை அவர்களுக்கு இப்போது உணர்த்தியுள்ளது.

பயணம்
கிராமசபைக் கூட்டங்களை மேலும் தொடர்ந்து நடத்த முடிவு செய்துள்ளார் மு.க.ஸ்டாலின். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டோம் என்பதோடு முடித்துக்கொள்ளாமல் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளையும் பரபரப்பாக தொடங்கிவிட்டது திமுக.
-
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!!












Click it and Unblock the Notifications