Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையின் தாழ்வான பகுதிகளுக்கு வந்திறங்கிய புத்தம் புதிய படகுகள்.. மாநகராட்சி நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையின் தாழ்வான பகுதிகளுக்கு பைபர் படகுகளை சென்னை மாநகராட்சி அனுப்பி வைக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. சென்னையின் தாழ்வான பகுதிகளான மடிப்பாக்கம், புழுதிவாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதிகளில் அதிகமாக தண்ணீர் தேங்கும் என்பதால், அந்த பகுதிகளுக்கு புதிய படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கேரளா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்ரா உள்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களுக்கு தென்மேற்கு பருவ மழை தான் மழைக்காலம் ஆகும். ஆனால் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் வடகிழக்கு பருவ மழை காலத்தில் அதிக மழை பெய்யும். இதில் குறிப்பாக தமிழ்நாடு அதிகப்படியான மழையை எதிர்கொள்ளும்.. அந்த வகையில் தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் வடகிழக்கு பருவமழை அதிகம் பெய்யும். இதில் சென்னை மாநகரம் ஒவ்வொரு ஆண்டு மிகமிக அதிகளவு மழையை எதிர்கொள்ளும்.

chennai rain boat

சென்னை மட்டுமில்லாது தாம்பரம், ஆவடி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும் வடகிழக்கு பருவ மழை காலத்தில் அதிகளவு மழைபொழிவை பெறுவது வழக்கம். அந்த வகையில், விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதாகவும், பருவமழை பொழிவு அதிகமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராகி வருகிறது. இதற்காக 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளதுடன், தங்கள் பகுதிகளுக்கு தேவையாக முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் மழைநீர் தேங்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள தாழ்வான பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். நிவாரண முகாம்கள், குடிநீர் வசதி, ஜெனரேட்டர் வசதி, சமையல் கூடங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேவையான எந்திரங்கள், மோட்டார் பம்புகள், படகுகள் உள்ளிட்ட வெள்ள மீட்பு நடவடிக்கைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சென்னையில் 320 இடங்கள் தண்ணீர் தேக்கம் உள்ள இடங்களாக கண்டறியப்பட்டிருக்கிறது. அதிக மழைப்பொழிவு இருக்கும்போது இந்த இடங்களில் தண்ணீர் வழிந்தோட 3 நாட்கள் வரையில் ஆகிறது. சென்னையை பொறுத்தவரை வேளச்சேரி, தரமணி, பெருங்குடி, துரைப்பாக்கம், திருவொற்றியூர், மணலி, தாம்பரம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகள் வழக்கமாக தண்ணீர் தேங்கும் இடங்களாக உள்ளது. அந்த பகுதிகளுக்கு படகுகளை அனுப்பி பொதுமக்கள் மீட்கப்படுகிறார்கள்.. அந்த வகையில், இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகுகளை சென்னை மாநகராட்சி தயார் நிலையில் வைக்க உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக 36 பைபர் படகுகளை தயார் நிலையில் வைத்திருக்கிறது. நேற்று மாதவரம் மண்டலத்திற்கு ஒரு படகையும் மற்றும் பெருங்குடி மண்டலத்திற்கு 2 படகையும் அனுப்பியுள்ளனர். சென்னை வேளச்சேரி அடுத்த புழுதிவாக்கத்திற்கு புதிய படகுகள் வந்திறங்கி உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+