"சக்ஸஸ் கருணாநிதி".. காலரை தூக்கிவிடும் திமுக.. தேசிய கொடியை ஏற்றிய முதல் முதல்வர்.. ஸ்டாலின் அபாரம்
முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தின் புரொபைல் போட்டோவை மாற்றி வைத்துள்ளார்
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் ட்விட்டர் பக்கத்தில் உள்ள புரொபைல் போட்டோவை ஏராளமானோர் திரண்டு பார்த்து கொண்டிருக்கிறார்கள்.. என்ன விஷயம்?
முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய புரொபைல் படத்தை மாற்றி வைத்துள்ளார்.. இந்த போட்டோவுக்கு ஒரு பின்னணி உள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்தே, ஜனவரி 26-ம் தேதி குடியரசு நாளன்று குடியரசுத் தலைவரும், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர நாளன்று இந்திய பிரதமரும் தேசிய கொடியை ஏற்றி வந்தனர்...
ஆனாலும், இந்த இரண்டு நாள்களிலும் அனைத்து மாநிலங்களிலும் ஆளுநரே தேசிய கொடி ஏற்றும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வந்தது.

சபாஷ்
இந்த வழக்கத்தை எதிர்த்து திமுக கேள்வி எழுப்பியது.. 1969ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று, சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில், அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி உரையாற்றினார்.. அப்போது, மாநில முதலமைச்சர்களுக்கு தேசிய கொடி ஏற்றும் உரிமையை வழங்க கோரிக்கையை விடுத்தார். இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது.. அதன்படி, "மாநில தலைநகரங்களில் ஜனவரி 26, குடியரசு நாளன்று ஆளுநர்களும், ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர நாளன்று முதலமைச்சர்களும் தேசிய கொடியை ஏற்றுவார்கள்" என்று ஆணை பிறப்பித்தது.

கருணாநிதி
இதையடுத்து, 1974 ஆகஸ்ட் 15-ம் நாள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொடி மரத்தில், முதல்வர் கருணாநிதி தேசிய கொடியை ஏற்றினார்... ஆக, சுதந்திர நாளன்று செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதன்முதலாக தேசிய கொடி ஏற்றிய பெருமை கருணாநிதியையே சாரும் என்பதை மறுக்க முடியாது.. கருணாநிதி பெற்றுத் தந்த இந்த உரிமையால்தான், இந்தியாவில் உள்ள எல்லா மாநில முதலமைச்சர்களும் சுதந்திர நாளன்று தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர் என்பதையும் மறக்க முடியாது.

கலைஞர்
"சுதந்திர திருநாளில் மாநில முதல்வர் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத்தந்த மிகச் சிறந்த முதல்வர் கலைஞர் தான்" என்று முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் கருணாநிதியை வெகுவாக பாராட்டவும் செய்தார்.. மத்திய அரசு பிறப்பித்து உத்தரவிட்ட அந்த ஆணையை கருணாநிதி கையில் வைத்தபடி இருக்கும் போட்டோக்கள் அப்போது பத்திரிகைகளில் பெரும் பாராட்டுக்களையும் பெற்றன.

செயின்ட் ஜார்ஜ் கோட்டை
இப்போது விஷயத்துக்கு வருவோம்.. ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் சுயவிவரப்படத்தை மாற்றியுள்ளார்... இந்திய மூவர்ணக் கொடியை வைத்துள்ளார்.. அத்துடன், கருணாநிதியின் போட்டோவையும் வைத்துள்ளார்.. 1974-ல் முதன்முதலில் உரிமை பெற்று முதல்வராக கருணாநிதி தேசிய கொடி ஏற்றி வைத்த போட்டோதான் இது.. மாநிலச் செயலகம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், அவருக்குப் பின்னால் உயரமான கம்பத்தின் மீது இந்திய தேசியக் கொடி பறக்க, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படிகளில் கெத்தாக இறங்கி வருகிறார்.
Recommended Video

புரொபைல்
இந்த படத்தை பதிவிட்ட ஸ்டாலின், 1974ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் மாநில முதல்வர்களின் உரிமையை முத்தமிழ் அறிஞர் தமிழ் அறிஞர் கலைஞர் உறுதி செய்தார் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் அவரது ட்விட்டர் புரொபைல் படத்தை மாற்றியதைடுத்து, ஏராளமான திமுகவினரும் இதே புரொபலை வைத்து வருகின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications