"சக்ஸஸ் கருணாநிதி".. காலரை தூக்கிவிடும் திமுக.. தேசிய கொடியை ஏற்றிய முதல் முதல்வர்.. ஸ்டாலின் அபாரம்
முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தின் புரொபைல் போட்டோவை மாற்றி வைத்துள்ளார்
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் ட்விட்டர் பக்கத்தில் உள்ள புரொபைல் போட்டோவை ஏராளமானோர் திரண்டு பார்த்து கொண்டிருக்கிறார்கள்.. என்ன விஷயம்?
முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய புரொபைல் படத்தை மாற்றி வைத்துள்ளார்.. இந்த போட்டோவுக்கு ஒரு பின்னணி உள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்தே, ஜனவரி 26-ம் தேதி குடியரசு நாளன்று குடியரசுத் தலைவரும், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர நாளன்று இந்திய பிரதமரும் தேசிய கொடியை ஏற்றி வந்தனர்...
ஆனாலும், இந்த இரண்டு நாள்களிலும் அனைத்து மாநிலங்களிலும் ஆளுநரே தேசிய கொடி ஏற்றும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வந்தது.

சபாஷ்
இந்த வழக்கத்தை எதிர்த்து திமுக கேள்வி எழுப்பியது.. 1969ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று, சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில், அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி உரையாற்றினார்.. அப்போது, மாநில முதலமைச்சர்களுக்கு தேசிய கொடி ஏற்றும் உரிமையை வழங்க கோரிக்கையை விடுத்தார். இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது.. அதன்படி, "மாநில தலைநகரங்களில் ஜனவரி 26, குடியரசு நாளன்று ஆளுநர்களும், ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர நாளன்று முதலமைச்சர்களும் தேசிய கொடியை ஏற்றுவார்கள்" என்று ஆணை பிறப்பித்தது.

கருணாநிதி
இதையடுத்து, 1974 ஆகஸ்ட் 15-ம் நாள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொடி மரத்தில், முதல்வர் கருணாநிதி தேசிய கொடியை ஏற்றினார்... ஆக, சுதந்திர நாளன்று செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதன்முதலாக தேசிய கொடி ஏற்றிய பெருமை கருணாநிதியையே சாரும் என்பதை மறுக்க முடியாது.. கருணாநிதி பெற்றுத் தந்த இந்த உரிமையால்தான், இந்தியாவில் உள்ள எல்லா மாநில முதலமைச்சர்களும் சுதந்திர நாளன்று தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர் என்பதையும் மறக்க முடியாது.

கலைஞர்
"சுதந்திர திருநாளில் மாநில முதல்வர் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத்தந்த மிகச் சிறந்த முதல்வர் கலைஞர் தான்" என்று முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் கருணாநிதியை வெகுவாக பாராட்டவும் செய்தார்.. மத்திய அரசு பிறப்பித்து உத்தரவிட்ட அந்த ஆணையை கருணாநிதி கையில் வைத்தபடி இருக்கும் போட்டோக்கள் அப்போது பத்திரிகைகளில் பெரும் பாராட்டுக்களையும் பெற்றன.

செயின்ட் ஜார்ஜ் கோட்டை
இப்போது விஷயத்துக்கு வருவோம்.. ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் சுயவிவரப்படத்தை மாற்றியுள்ளார்... இந்திய மூவர்ணக் கொடியை வைத்துள்ளார்.. அத்துடன், கருணாநிதியின் போட்டோவையும் வைத்துள்ளார்.. 1974-ல் முதன்முதலில் உரிமை பெற்று முதல்வராக கருணாநிதி தேசிய கொடி ஏற்றி வைத்த போட்டோதான் இது.. மாநிலச் செயலகம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், அவருக்குப் பின்னால் உயரமான கம்பத்தின் மீது இந்திய தேசியக் கொடி பறக்க, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படிகளில் கெத்தாக இறங்கி வருகிறார்.
Recommended Video

புரொபைல்
இந்த படத்தை பதிவிட்ட ஸ்டாலின், 1974ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் மாநில முதல்வர்களின் உரிமையை முத்தமிழ் அறிஞர் தமிழ் அறிஞர் கலைஞர் உறுதி செய்தார் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் அவரது ட்விட்டர் புரொபைல் படத்தை மாற்றியதைடுத்து, ஏராளமான திமுகவினரும் இதே புரொபலை வைத்து வருகின்றனர்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications