எண்ணூர் பக்கிங்காம் கால்வாயில் கச்சா எண்ணெய்! தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது பசுமை தீர்ப்பாயம்
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் வட சென்னை பகுதிகளில் இன்னும் வடியாமல் இருக்கிறது. இந்நிலையில் பக்கிங்காம் கால்வாயில் கச்சா எண்ணெய் கலந்திருக்கிறது. இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
வழக்கமாக சாதாரண பருவமழைக்கே சென்னை ஒரு மாதிரி கசகச என்றுதான் இருக்கும். இந்நிலையில், கடந்த 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை, ஒட்டு மொத்த சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளம் சென்னைக்கு முக்கிய பாடமாக இருந்த போதும், இந்த புயல் மழையை எதிர்கொள்ள முடியவில்லை. மழை நின்று 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் வேளச்சேரி போன்ற புறநகர் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியவில்லை.

மறுபுறம் சென்னையின் நகர் பகுதிகளான, வட சென்னை பகுதியில் மக்கள் மின்சாரம், குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். வடசென்னையின் பட்டாளம், அம்மையம்மன், திருவொற்றியூரின் சில பகுதிகள், மணிலியின் ராஜீவ்காந்தி நகர் என பல்வேறு பகுதிகளில் மின்சாரம் இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை. இதில் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்திருப்பதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சென்னை திருவள்ளூரில் பெய்யும் கனமழைக்கு வடிகாலாக செயல்படுவது கொசஸ்தலை ஆறுதான். இப்படி இருக்கையில் கடந்த 4ம் தேதி அதிக அளவு மழை பெய்ததால் இந்த ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. போதாத குறைக்கு புழல் ஏரியிலிருந்தும் உபரி நீர் திறக்கப்பட்டிருக்கிறது. எனவே வடசென்னையின் எண்ணூர், மணலி, எர்ணாவூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
மட்டுமல்லாது இந்த பகுதிகளில் இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலும் வெள்ளம் புகுந்திருக்கிறது. இந்நிறுவனங்கள் மழைநீரை வெளியேற்றும்போது அத்துடன் சேர்ந்து கச்சா எண்ணெய்யும் வெளியேறியிருக்கிறது. குடியிருப்பு பகுதிகளில் கச்சா எண்ணெய் சூழந்ததால் மக்கள் பெரும் சிக்கலை எதிர்கொண்டிருக்கின்றனர். கண் எரிச்சல், தோல் அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது இது எரியும் தன்மை கொண்டதால் மக்கள் வீடுகளில் சமைக்கவே அச்சப்படுகின்றனர்.
மறுபுறம் கச்சா எண்ணெய் கடலிலும் கலந்திருக்கிறது. இது தொடர்பாக கொடுங்கையூரில் ஆய்வு மேற்கொண்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம், மணலி சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்(சிபிசிஎல்) நிறுவனத்திலிருந்து மழை நீர் வெளியேற்றப்பட்டபோது அதன் மூலம் கச்சா எண்ணெய் வெளியேறியுள்ளது என்று விளக்கமளித்துள்ளது. அதாவது பூமிக்கு அடியில் கச்சா எண்ணெய் தேக்கி வைக்கப்பட்டிருக்கிறது. வெள்ளம் சிபிசிஎல் நிறுவனத்தை சூழ்ந்ததையடுத்து அதை வெளியேற்றியிருக்கிறார்கள். அப்போது கச்சா எண்ணெய்யும் சேர்ந்து வெளியேறியுள்ளது.
கடலில் எண்ணெய் கலந்திருப்பதால் மீன் வளம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக செய்திகள் வெளியான நிலையில், தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணை ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணா தலைமையில் தொடங்கியது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட பகுதிகளை முறையாக ஆய்வு செய்து நாளை பதிலளிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications