இனி ஒரு வரி உயர்வு வந்தால்.. வியாபாரிகள் வீதிக்கு வருவோம்.. ஜிஎஸ்டி உயர்வுக்கு விக்கிரமராஜா கண்டனம்
சென்னை: இனி ஒரு வரி உயர்வு வந்தால் பொதுமக்களும், வியாபாரிகளும் வீதிக்கு வந்து போராடுவார்கள். அவர்களோடு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பும் போராடும். என விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மத்திய அரசின் தவறான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளாலும், ஆன்லைன் வர்த்தகத்தில் அந்நிய நிறுவனங்களை அனுமதித்ததாலும், இந்திய பொருளாதாரத்தில் வியாபாரிகள், விவசாயிகள் வறுமைக்கோட்டுக்கு கீழே செல்லும் நிலை உருவாகி உள்ளது.

பெரும் அதிர்ச்சி
வணிகம் நொடிந்துபோய் உள்ள தருணத்தில் மீண்டும் ஜி.எஸ்.டி. வரியில் சீரமைப்பு என்ற நோக்கத்தில் மத்திய அரசு மீண்டும் வரி உயர்வை அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

12 சதவீதம்
வரி விதிப்பு என்பது 5 சதவீதம், 12 சதவீதம் என்ற 2 நிலைகளில் மட்டுமே இருக்க வேண்டும். வேளாண் விலை பொருட்களும், உணவக பண்டங்களுக்கும் மக்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்களுக்கும், வரி உயர்வு என்பது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

வரி உயர்வு
இனி ஒரு வரி உயர்வு வந்தால் பொதுமக்களும், வியாபாரிகளும் வீதிக்கு வந்து போராடுவார்கள். அவர்களோடு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பும் போராடும்.

மத்திய அரசு
மத்திய - மாநில அரசுகள் மக்கள் மீதும் வணிகர்கள் மீதும் அதிக வரிச்சுமைகளை விதிப்பதை உடனடியாக கைவிட்டு, உரிய வரியை மட்டும் வசூலிக்க வேண்டும். இவ்வாறு விக்கிரமராஜா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications