Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூர்யா சிந்தித்து தன்னை திருத்திக் கொள்ள வேண்டும், இல்லை என்றால்?- காடுவெட்டி குரு மகன் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சூர்யா குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை இழிவுப்படுத்தக் கூடிய படங்களில் நடித்தால், அவரது ரசிகர்களே அவரை மதிக்காத சூழல் உருவாகும் எனக் கூறுகிறார் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் குருவின் மகன் கனலரசன்.

ஜெய்பீம் திரைப்படத்தை பொறுத்தவரை சூர்யா வெறும் நடிகர் என்பதால் அவர் மீது மட்டும் முழு தவறை கூற இயலாது என்றும் அந்த திரைப்படத்தின் இயக்குநர் தான் குற்றஞ்சாடப்பட வேண்டியவர் என்றும் கூறுகிறார் குரு கனலரசன்.

மாவீரன் மஞ்சள் படை என்ற பெயரில் அமைப்பு நடத்தி வரும் அவர் ஒன் இந்தியா தமிழிடம் பகிர்ந்துகொண்ட விவரம் பின்வருமாறு;

ஜெய்பீம்

ஜெய்பீம்

''ஜெய்பீம் திரைப்படத்தை பொறுத்தவரை அது ஒரு நல்ல படம். அதில் மாற்றுக்கருத்தே எனக்கு இல்லை. ஆனால் அந்தோணிச்சாமி கேரக்டருக்கு குருமூர்த்தி என்ற பெயரை சூட்ட வேண்டியதன் அவசியம் என்ன வந்தது என்பது தான் எங்கள் கேள்வி. இரண்டு சாதிகளுக்குள் சண்டையை உருவாக்க முயன்றிருக்கிறார் ஜெய்பீம் திரைப்படத்தின் இயக்குநர் ஞானவேல். முன்பை போல் இரண்டு சாதிகளுக்குள் நாங்கள் மோதிக்கொண்டிருக்க மாட்டோம். சட்டப்பூர்வமாக என்ன நடவடிக்கை மேற்கொள்ள முடியுமோ அந்த நடவடிக்கையை இயக்குநர் ஞானவேல் போன்ற நபர்கள் மீது எடுப்போம்.''

 சூர்யா நல்லவர்

சூர்யா நல்லவர்

''நடிகர் சூர்யா நிறைய நல்லது செய்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நிறைய பிள்ளைகளை படிக்க வைக்கிறார் என்றும் அறிந்திருக்கிறேன். அதனால் அவரை நல்ல மனுஷனாக தான் நான் பார்க்கிறேன். சூர்யாவுக்கு இதை நான் எச்சரிக்கையாக சொல்லவில்லை, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை தாக்கி எடுக்கப்பட்டுள்ள இது போன்ற திரைப்படங்களில் நடித்தால் அவர் மீது மக்கள் வைத்துள்ள மரியாதை நிச்சயம் குறைந்துவிடும். இதை நடிகர் சூர்யா சிந்தித்துப் பார்த்து தனது தவறை திருத்திக்கொள்வார் என நம்புகிறேன். இல்லையென்றால் அவரது ரசிகர்களே அவரை மதிக்காத சூழல் உருவாகும்.''

விரோதம்

விரோதம்

''அந்தோணிசாமி என்ற பெயர் கிறிஸ்துவ பெயராக இருப்பதால் அதை சூட்ட இயக்குநர் ஞானவேலுக்கு பயமாக இருந்ததா எனத் தெரியவில்லை. கலசகுண்டலத்தையும், குருமூர்த்தி என்ற பெயரையும் தேவையில்லாமல் ஜெய்பீம் திரைப்படத்திற்கு இயக்குநர் ஏன் கொண்டு வந்தார் என்பதே எனது கேள்வி. எல்லா நேரமும் நாங்கள் பொறுமையாக இருக்கமாட்டோம். இரண்டு சமுதாயத்திற்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தும் நோக்கில் இயக்குநர் ஞானவேலின் செயல்பாடுகள் உள்ளன.''

இயக்குநர் ஞானவேல்

இயக்குநர் ஞானவேல்

''ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளராகவும் இருக்கிறார் சூர்யா. இதனால் அவர் நடிப்பு, பிஸினஸ் என்கிற ரீதியில் பார்க்கிறார். இயக்குநர் ஞானவேல் இனியும் தொடர்ந்து ஒரு சமுதாயத்தை இழிவுப்படுத்த வேண்டும் என நினைத்தார் என்றால் அவர் வீட்டை விட்டு வெளியவே வர முடியாத சூழல் உருவாகும்.''

Recommended Video

    Jai Bhim பற்றி Surya முன்பு வைக்கப்படும் கேள்விகள் | Anbumani Ramadoss | Oneindia Tamil
    கோபம் யார் மீது?

    கோபம் யார் மீது?

    குரு கனலரசனின் கோபம் முழுவதும் ஜெய்பீம் திரைப்படத்தின் இயக்குநர் மீது தான் இருக்கிறதே தவிர நடிகர் சூர்யா மீது இல்லை என்பதை இதன் மூலம் உணர முடிகிறது. இதனிடையே குருவின் மருமகனும் ஜெய்பீம் படக்குழுவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து எதிர்வினையாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+