டெல்லியைப் போலவே.. வண்ணாரப்பேட்டையிலும் நடக்கும்.. எச். ராஜா எச்சரிக்கிறார்
சென்னை: டெல்லியில் நடப்பது போலவே நாளை வண்ணாரப்பேட்டையிலும் நடக்கும் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா எச்சரித்து டிவீட் போட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
டெல்லியைப் போலவே இங்கும் கலவரம் வரும் என்று அவர் பகிரங்கமாகவே எச்சரித்துள்ளார். மேலும் வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தி வருபவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

டெல்லியில் அமைதியான முறையில் நடந்து வந்த சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது சிஏஏ ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை தாக்குதலால் அங்கு மிகப் பெரிய கலவரம் வெடித்துள்ளது. இஸ்லாமியர்கள் மிகப் பெரிய அளவில் தாக்கப்பட்டு வருகின்றனர். பல வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்க் எரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். வன்முறையில் ஒரு காவலரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் வன்ணாரப்பேட்டையிலும் இதுபோல கலவரம் வரும் என்று எச். ராஜா எச்சரித்திருப்பது பதட்டத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இதுதொடர்பாக எச். ராஜா நேற்று போட்ட டிவீட்டில் கூறியுள்ளதாவது:
"கடந்த 2 நாட்களாக டில்லியில் நடப்பது வண்ணாரப்பேட்டையில், தமிழகத்தில் ஏற்படலாம். வண்ணாரப்பேட்டையிலும் முஸ்லீம் பெண்கள் காவல்துறையினர் மீது கற்களையும் செருப்புக்களையும் வீசினார்கள் என்று சட்டமன்றத்தில் கூறியுள்ளார். ஆயுதங்கள் வருமுன் இவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும்"
கடந்த 2 நாட்களாக டில்லியில் நடப்பது வண்ணாரப்பேட்டையில், தமிழகத்தில் ஏற்படலாம். வண்ணாரப்பேட்டையிலும் முஸ்லீம் பெண்கள் காவல்துறையினர் மீது கற்களையும் செருப்புக் களையும் வீசினார்கள் என்று சட்டமன்றத்தில் கூறியுள்ளார். ஆயுதங்கள் வருமுன் இவர்கள் அங்கிருந்து அப்புறப் படுத்தப்பட வேண்டும்
— H Raja (@HRajaBJP) February 25, 2020
எச். ராஜாவின் இந்த எச்சரிக்கைப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயுதங்கள் வரும் என்று எச். ராஜா கூறியுள்ளார். யாருக்கு ஆயுதங்கள் வரும் என்பதை அவர் தெளிவாகச் சொல்லவில்லை. வண்ணாரப்பேட்டையிலும் நடக்கும் என்றால் யாரேனும் ஏதேனும் திட்டம் தீட்டியுள்ளனரா, அது எச். ராஜாவுக்கு ரகசியத் தகவலாக தெரிய வந்துள்ளதா என்றும் புரியவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications