கோயில் நிலம் வக்ப் வாரிய சொத்தா? அதெப்படி.. மோசடியை முறியடிப்போம் - எச்.ராஜா சபதம்
சென்னை: திருச்சி மாவட்டம் திருச்செந்துறை கிராமத்திற்கு உட்பட்ட நிலங்கள் வக்ப் வாரியத்துக்கு உட்பட்டது என பதிவாளர் அறிவித்துள்ளதற்கு பாஜகவை சேர்ந்த எச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் அருகே அமைந்து இருக்கிறது திருச்செந்துறை கிராமம். இப்பகுதியை சேர்ந்த ராஜகோபால் என்ற நபர் 1 ஏக்கர் 2 செண்ட் பரப்பளவு நிலத்தை விற்க ராஜராஜேஸ்வரி என்ற நபருடன் ஒப்பந்தம் செய்தார்.
ரூ.3.50 லட்சத்துக்கு பத்திரப்பதிவு செய்ய திருச்சி 3ம் எண் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்ற அவரிடம், இந்த நிலம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்றும் இதை பதிவு செய்ய முடியாது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பாஜக எதிர்ப்பு
இந்த நிலத்தை பதிவு செய்ய வேண்டும் என்றால் சென்னையில் உள்ள வக்பு வாரியத்துக்கு சென்ற தடையில்லா சான்றிதழை பெற வேண்டும் என சார்பதிவாளர் முரளி தெரிவித்து இருக்கிறார். இதற்கு அப்பகுதியை சேர்ந்த பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கோயில்கள், வீடுகள், விவசாய நிலங்களை கொண்ட இப்பகுதி வக்பு வாரியத்துக்கு எப்படி சொந்தமாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

பதிவுத்துறை அறிவிப்பு
இது தொடர்பாக பதிவுத்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "3 ஆம் எண் இணைச் சார்பதிவக எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் ஒரு சில சர்வே எண்கள் மற்றும் திருச்செந்துறை கிராமம் சர்வே எண்கள் முழுவதும் திருச்சி டவுன் எல்லைக்கு உட்பட்ட ஒரு சில T.S.No-களில் கட்டுப்பட்ட சொத்துக்கள் தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று வக்ப் வாரியம் நமது அலுவலகத்துக்கு கோப்பு அனுப்பியுள்ளது.

வக்ப் வாரிய சொத்து
ஆவணம் பதிவுக்கு வரும் முன் மேற்பட்ட சர்வே எண்களில் வக்ப் வாரியத்துக்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளதா? என சரிபார்த்த பின் ஆவணங்களை தயார் செய்து ஆவணப்பதிவுக்கு எடுத்து வருமாறு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. வக்ப் வாரியத்துக்கு சொந்தமான சொத்துக்கள் அடங்கிய கோப்பு 3 நீர் இணை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

எச்.ராஜா எதிர்ப்பு
இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டு உள்ள பதிவில், "திருச்சென்துரை கிராமத்தில் உள்ள அனைத்து சர்வே நம்பரும் வக்ஃப் போர்டுக்கு சொந்தமாம். வக்ஃப் போர்டு பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு கோப்பு அனுப்பும். உடனே பதிவாளர் அதை மக்களுக்கு அறிவிப்பாராம். எப்படி சாத்தியம். கோவில் நிலம் எப்படி வக்ஃப் நிலமானது. மோசடியை முறியடிப்போம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல்












Click it and Unblock the Notifications