கனிமொழிக்கும் எச்.ராஜாவிற்கும் ட்விட்டரில் காலையிலேயே வார்த்தைப்போர்
Recommended Video

சென்னை: பட்டேல் சிலை விவகாரம் தொடர்பாக, திமுக எம்.பி. கனிமொழி மற்றும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா நடுவே டிவிட்டரில் காரசார வாக்குவாதம் நடைபெற்றது.

கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசு வழங்கிய தொகை குறித்து கனிமொழி டிவிட்டரில் விமர்சனம் செய்திருந்தார். அவர் வெளியிட்ட ட்வீட்டில்,
உயிரற்ற பட்டேல் சிலைக்கு 3000 கோடியாம், உயிர்வாழ துடிக்கும் #கஜா புயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட தமிழர்களுக்கு 350 கோடியாம்! #GajaCycloneRelief
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 2, 2018
"உயிரற்ற பட்டேல் சிலைக்கு 3000 கோடியாம், உயிர்வாழ துடிக்கும் #கஜா புயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட தமிழர்களுக்கு 350 கோடியாம்! " இவ்வாறு கூறியிருந்தார்.
இதனால் எச்.ராஜாவிற்கு வந்ததே பார்க்கலாம் கோபம். அவர் வெளியிட்ட ட்வீட்டில்,
குஜராத்தில் உள்ள படேல் சிலை உயிரற்ற சிலை. ஆனால் தமிழகத்தில் உள்ள பல நூற்றூக் கணக்கான ஈ.வெ.ரா. சிலைகள் உயிருள்ள சிலைகளா @KanimozhiDMK
— H Raja (@HRajaBJP) December 3, 2018
"குஜராத்தில் உள்ள படேல் சிலை உயிரற்ற சிலை. ஆனால் தமிழகத்தில் உள்ள பல நூற்றூக் கணக்கான ஈ.வெ.ரா. சிலைகள் உயிருள்ள சிலைகளா" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால், கனிமொழி ட்வீட்டின் மையக் கருத்து, என்பது மத்திய அரசு போதிய புயல் நிவாரண தொகை தரவில்லை என்பதுதான். அதற்கு எச்.ராஜா பதில் சொல்லாமல், சிலைக்கு உயிருள்ளதா இல்லையா என்று கேட்டதோடு, பெரியார் சிலைகள் பற்றி கூறி விஷயத்தை திசை திருப்பியுள்ளார். இப்போது திமுக மற்றும் பாஜக நெட்டிசன்கள், பட்டேல் சிலையா, பெரியார் சிலையா என்று தங்களுக்குள் இதுபற்றி விவாதித்து வருகிறார்களே தவிர, புயல் நிவாரணத்தை மறந்துவிட்டனர். இல்லை, இல்லை.. மறக்கடிக்கப்பட்டுவிட்டனர்.












Click it and Unblock the Notifications