சபரிமலை செல்ல முயலும் பெண்கள் பின்னணியை விசாரியுங்கள்.. எச்.ராஜா ஆவேசம்
Recommended Video
சென்னை: சபரிமலை செல்லும் பெண்களின் பின்னணி குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று, பாஜக தேசியப் பொதுச்செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இன்று மாலை நடைதிறப்பை முன்னிட்டு பெண்கள் சிலர் ஐயப்பன் கோயிலுக்கு சென்றனர்.
அவர்களை, பக்தர்கள் தடுத்து நிறுத்தி திருப்பியனுப்பினர். கேரளாவில் பரவலாக பெண்கள் மத்தியிலும், இந்த போராட்டத்திற்கு ஆதரவு உள்ளது. கட்சி பாகுபாடு இன்றி, இந்த விஷயத்தில் கம்யூனிஸ்ட் தவிர்த்து பிற அனைத்து தரப்புமே ஒரே குரலில், அனைத்து வயது பெண்கள் சபரிமலை செல்வதை எதிர்க்கிறார்கள்.
இது பால் சமநிலை பிரச்சினை இல்லை. ஐயப்ப சுவாமி மீது பக்தி உள்ள தாய்மார்கள் நாங்கள் காத்திருக்க தயார் என்று தெளிவாக போராடிவரும் நிலையில் கோவிலுக்கு செல்ல முற்படுபவர்களின் பின்னணி குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.
— H Raja (@HRajaBJP) October 17, 2018
இந்த நிலையில், எச்.ராஜா வெளியிட்டுள்ள ட்வீட்டை பாருங்கள். "இது பால் சமநிலை பிரச்சினை இல்லை. ஐயப்ப சுவாமி மீது பக்தி உள்ள தாய்மார்கள் நாங்கள் காத்திருக்க தயார் என்று தெளிவாக போராடிவரும் நிலையில் கோவிலுக்கு செல்ல முற்படுபவர்களின் பின்னணி குறித்து விசாரிக்கப்பட வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.