வெயில்ட்றா.. இவன் இன்னும் திருந்தல மாமா.. "நட்சத்திரம்" போயிருச்சு, "அக்னி" இன்னும் இங்கதான் இருக்கு
சென்னை: "எவன்டா சொன்னது.. "நட்சத்திரம்" மட்டும்தான் போயிருக்கு.. "அக்னி" இன்னமும் இங்கேயேதான் இருக்கு" என்பது உட்பட பல்வேறு மீம்ஸ்கள் இணையத்தில் ரவுண்டு கட்டி வருகின்றன.
தமிழ்நாட்டில் இந்த வருடம் வெயில் தொடங்குவதற்கு முன்பே, வெயில் வாட்டி எடுக்க தொடங்கிவிட்டது... பல மாவட்டங்களில் வெயில் சதமடிக்கவும் ஆரம்பித்துவிட்டது.
பிறகு அக்னி நட்சத்திரம் முழுவதுமே சொல்ல முடியாத அளவுக்கு வெயிலின் கடுமை தென்பட்டது.. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்..
அதிர்ச்சி: ஒருவழியாக, கடந்த 26ம் தேதி அக்னி முடிந்தாலும், வெயில் இன்னும விடவில்லை.. சென்னை, வேலூர், மதுரை என ஒவ்வொரு மாவட்டங்களிலும் 100 டிகிரியை கடந்து பிளந்து கட்டிவருகிறது.. இந்த மாதத்தில் நுங்கம்பாக்கத்தில் 108 டிகிரி பாரன்ட் வெப்பம் பதிவாகி பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இப்படி அதிகரித்தது இது இரண்டாவது முறையாகும்..
கடந்த 1948-க்கு பிறகு, இந்த அளவுக்கு பதிவானது இது 7வது முறை என்றும் வானிலை நிபுணர்கள் அதிர்ச்சியுடன் சொல்கிறார்கள்.
அதனால்தான், பள்ளிகள் திறப்பும் தள்ளி போய் உள்ளது.. வருகிற 14ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருக்கிறார். மாணவர்கள் வெயிலில் அலைய வேண்டாம் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியிருக்கிறது..
மீம்ஸ்கள்: எனினும், வீட்டிற்குள்ளேயே புழுக்கம் அதிகமாகி, கடும் அவதிக்கு பொதுமக்கள் உள்ளாகி வருகிறார்கள். இதனால் கரண்ட் பில்லும் இந்த வெயில் காலங்களில் அதிகமாகி வருவது, நடுத்தர மற்றும் ஏழை மக்களை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. அக்னி நட்சத்திரம் முடிந்தும்கூட வெயிலின் தாக்கம் நீடிப்பதால், ட்விட்டர்வாசிகள் இதையே மீம்ஸ்களாக தெறிக்க விட்டு வருகிறார்கள்.. இணையத்தில் கண்ணில் பட்ட காமெடி மீம்ஸ்கள்தான் இவை:


















Click it and Unblock the Notifications