Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புறம்போக்கு நிலம்.. விவசாயிகளுக்கு குஷி.. 100 நாள் வேலை திட்டத்தில் அடுத்த அதிரடி.. இனி நிம்மதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 100 நாள் வேலை திட்டம் சம்பந்தமாக, முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவின் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலை திட்டம்) இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.

Squatter land 100 days work project farmers 100

100 நாள் வேலை திட்டம்: இந்த திட்டத்தின்கீழ், குளங்களை தூர்வாருவது,கால்வாய்களை பராமரிப்பது, அரசுக்கு சொந்தமான காடுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது என பல்வேறு அரசு சார்ந்த பணிகளுக்கு 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதேபோல சமீபத்தில் கூட இதில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது..

மேலும், பொதுமக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சமூகத் தணிக்கை தொடர்பான புகார்கள் அல்லது குறைகளை தெரிவித்திட கட்டணமில்லா தொலைபேசி எண். 18004252152-யை தொடர்புகொள்ளுமாறும், மேலும் இது தொடர்பான மாவட்ட வாரியான குறைதீர்க்கும் அலுவலர்கள் குறித்த விபரங்கள், வாட்ஸ்அப் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை tnrd.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது..

அதிரடி அறிவிப்பு: அந்தவகையில், ஒருபக்கம் ஊதிய உயர்வு, மறுபக்கம் புகார்களின் மீது நடவடிக்கை என தமிழக அரசு தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது. இப்போதுகூட, மீண்டும் ஒரு மகிழ்ச்சி செய்தியை தெரிவித்துள்ளது. அந்த வகையில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 5,000 புதிய சிறு குளங்கள், 250 கோடி ரூபாயில் அமைக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அரசு தரப்பில் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன.

அதன் விபரம் இதுதான்: "ஒரு கிராம ஊராட்சியில், குறைந்தது ஒரு புதிய குளம் உருவாக்கலாம்.

- நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ள பகுதிகளில், ஒன்றுக்கும் மேற்பட்ட குளங்களை உருவாக்கலாம்

- ஏரி மற்றும் நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில், புதிய குளம் அமைப்பதாக இருந்தால், அப்பகுதி, 10 ஆண்டுகளுக்கு மேலாக, துார் வாரப்படாத பகுதியாக இருக்க வேண்டும்.

- சமுதாய குளங்களை உருவாக்கலாம். ஆனால், புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளக்கூடாது

மகிழ்ச்சி: - புதிய குளங்களை உருவாக்கும் போது, அவற்றுக்கு தண்ணீர் வருவதற்கு, புதிய கால்வாய்களை அமைக்கலாம்" என்று, அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+