வங்கி ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஹேப்பி நியூஸ்.. மொத்தமாக பணம் கொட்டப்போகுது.. அதுவும் இவ்வளவா?
சென்னை: வங்கி ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ் வந்துள்ளது. நீண்ட பேச்சு வார்த்தைக்கு பின்னர் பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத ஊதிய உயர்வு வழங்க இந்திய வங்கிகள் கூட்டமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
பொதுத்துறை வங்கி ஊழியர்கள், ஊதிய உயர்வு, வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்தியன் வங்கி சங்கம் (ஐபிஏ) மற்றும் வங்கி ஊழியர் சங்கங்கள் இடையே 12வது ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை முடிவில், பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத ஊதிய உயர்வு வழங்க இந்திய வங்கிகள் கூட்டமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. நவம்பர் 1, 2022 முதல் அமலுக்கு வரும் இந்த ஊதிய உயர்வு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இதன்படி வங்கி ஊழியர்கள் சம்பளத்தில் 17 சதவீதம் கூடுதலாக பெறுவார்கள்.
அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (AIBOC) பொதுச் செயலாளர் ரூபம் ராய் இந்த தகவலை தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், இறுதி ஒப்பந்தம் இரண்டு மாதங்களுக்குள் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1986 முதல் அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியம் அதிகம் பெற வழிவகுக்கும் என்றார். இந்த ஒப்பந்தத்தால் வங்கிகளுக்கு 7988 கோடி ரூபாய் செலவாகும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த கோரிக்கை ஏற்கப்படுமா இல்லை நிராகரிக்கப்படுமா என்பது தெரியவில்லை..
ஊழியர்கள் பற்றாக்குறை: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. 100 கோடி வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் சேவை செய்து வருகின்றன. அனைவருக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிராமங்களில் வங்கிக் கிளைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
வங்கி சேவை தான் இந்தியாவின் உயிர்நாடியாக உள்ள நிலையில் வங்கிகளில் போதிய ஊழியர்கள் நியமிக்கப்படாததால், பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதோடு, வாடிக்கையாளர்களுக்கும் உரிய சேவை வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
வங்கிகளில் ஆண்டுதோறும் கிளார்க் பணியிடங்கள் குறைந்து கொண்டே வரும் நிலையில், 2024-25-ம் ஆண்டில் 5 வங்கிகளுக்கு மொத்த 4,045 கிளார்க் பணியிடங்களுக்கு மட்டுமே ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மற்ற வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப அந்த வங்கிகள் தரப்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications