தூண்டுதலின் பேரில் போராட்டம்! என் கணவர் நிரபராதி! முன்னாள் மாணவி மீது குற்றம்சாட்டிய ஹரிபத்மன் மனைவி
சென்னை: எனது கணவரை பழி வாங்குவதற்காகவே பொய்யான புகார்களை கொடுத்துள்ளதாக ஹரி பத்மனின் மனைவி திவ்யா தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் உள்ளது கலாஷேத்ரா கல்லூரி. இங்கு ஆயிரக்கணக்கான மாணவிகள் பயின்று வருகிறார்கள். இங்கு நடனம், இசை, இசை வாத்தியங்கள் உள்ளிட்டவை கற்பிக்கப்படுகின்றன. இந்த கல்லூரியில் உதவி பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித் லால், ஸ்ரீநாத், சாய் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர். இவர்கள் 4 பேரும் அங்குள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. முன்னாள் மாணவி ஒருவர் கொடுத்த புகாரை கல்லூரி நிர்வாகம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை என மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையடுத்து கடந்த மாதம் 30ஆம் தேதி முதல் கலாஷேத்ரா மாணவிகள் கல்லூரிக்கு செல்வதை புறக்கணித்துவிட்டு போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் முன்னாள் மாணவி புகார் கூறிய ஹரி பத்மனை சென்னை மாதவரத்தில் இருந்து போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவருக்கு ஏப்ரல் 13 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில் ஹரிபத்மனின் மனைவி திவ்யா காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தனது கணவருடன் பணியாற்றிய 2 பெண் பேராசிரியர்களின் தூண்டுதலின் பேரிலேயே முன்னாள் மாணவி குற்றச்சாட்டை அளித்துள்ளார்.
மூத்த பேராசிரியர் ஜனார்த்தனன், அனைவரது முன்னிலையிலும் எனது கணவரை பாராட்டியதாகவும், அதனால் 2 பெண் பேராசிரியர்களும் பொறாமையில், முன்னாள் மாணவியை தூண்டிவிட்டு பொய் புகாரை அளித்துள்ளாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது கணவர் மீது புகார் அளித்த முன்னாள் மாணவி, கலாஷேத்ராவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவரிடம் தனது கணவர் கடுமையாக நடந்து கொண்டதாகவும், அதற்கு பழிவாங்கும் நோக்கில் அவர், பொய்யான புகாரை அளித்துள்ளாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஹரி பத்மன் மனைவி செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஹரி பத்மன் எந்த தவறையும் செய்யவில்லை. நாங்கள் இருவரும் இதே கல்லூரியில் படித்துவிட்டு இங்கு பணியாற்றி வருகிறோம். நாங்கள் கலாஷேத்ரா வளாகத்திலேயே குடியிருக்கிறோம். கலாஷேத்ரா பாலியல் விவகார போராட்டத்திற்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள்.போராட்டத்திற்கு பின்னால் உள்ளவர்கள் குறித்து நான் பேச விரும்பவில்லை.
காவல் துறை முழுமையாகவும் வெளிப்படையாகவும் விசாரணை நடத்த வேண்டும். உண்மை வெளிவந்தால் என் கணவர் நிரபராதி என தெரியும். என் கணவர் மீது முன்னாள் மாணவி கொடுத்த புகார் பொய் புகார். கலாஷேத்ராவில் நடனம் பயில்வதற்கு முன்னர் பிரார்த்தனை கூட்டம் நடத்தப்படும். இந்த கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்வார்கள். புகார் கொடுத்த மாணவி கலந்து கொள்ளாததால் என் கணவர் அந்த பெண்ணை கண்டித்தார்.

இதனால் என் கணவர் மீது பொய்யான புகாரை கொடுத்துள்ளார். என் குழந்தைகளுக்கு என் கணவர்தான் ஹீரோ. எங்கள் குழந்தைகளிடம் பேசக் கூடாது என பள்ளியில் பயிலும் மற்ற மாணவர்களின் பெற்றோர் கூறியுள்ளதாக என் குழந்தைகள் தெரிவிக்கிறார்கள். தனக்கு பாலியல் சீண்டல் நடந்ததா சொல்லப்படும் தேதிக்கு பின்னர் கூட என் குழந்தையின் பிறந்தநாளுக்காக என் வீட்டுக்கு அந்த மாணவி வந்திருக்கிறார். பிழைப்புக்காக ஊர் விட்டு ஊர் வந்த எங்களுக்கு இதெல்லாம் தேவையா. யுஜி படிக்கும் மாணவிகளுக்கு என் கணவர் வகுப்பெடுக்காத நிலையில் அவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக மற்ற மாணவிகள் எப்படி புகார் கூற முடியும் என திவ்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications