இவர் தான் ரியல் வாரிசு.. பாட்டுப்பாடவா.. பாடம் சொல்லவா.. 100 வயது தந்தையை நெகிழ வைத்த 70 வயது மகன்
நூறு வயது தந்தைக்கு எழுபது வயது மகன் பாடல் பாடி உற்சாகப்படுத்தும் காட்சி நெட்டிசன்களை நெகிழ வைத்துள்ளது.
சென்னை: நூறு வயது தந்தைக்கு எழுபது வயது மகன் பாடல் பாடி உற்சாகப்படுத்தும் காட்சி நெட்டிசன்களை நெகிழ வைத்துள்ளது. தளர்ந்து படுக்கையில் விழும் காலத்தில் அன்பு செலுத்தும் இதைப்போல் பிள்ளைகளைப் பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள் தான்.
இந்த காலத்தில் பிள்ளைகள் பெற்றோர்களை கவனிப்பது இல்லை. ஒரு வயதுக்கு மேல் வாழ்வதே சுமையாகிவிட்டது. பெற்றோர்களை சுமையாக நினைக்கும் பிள்ளைகளே அதிகமாக உள்ளனர்.
பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உறவு தற்போது சுமூகமாக இல்லை. தங்கள் சுதந்திரம் பறிபோகும் என்று நினைத்து அவர்களை தங்களுடன் சேர்த்துக் கொள்வது இல்லை. கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையே இந்த காலத்தில் அடியோடு சிதைந்துவிட்டது. இப்படியான சூழலில் அபூர்வமாக சிலர் பெற்றோருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்கள். அவர்களின் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து ஒருவருக்காக மற்றொருவர் வாழும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையை பெருநகரங்களில் சாத்தியமில்லாத அளவில் இருக்கிறது. ஆனால் கிராமங்களில் இன்னமும் சில இடங்களில் இருக்கிறது என்பது ஆறுதலான விஷயம்

சரி விஷயத்திற்கு வருவோம். சுமார் 100 வயதான தந்தைக்கு 70 வயதை கடந்த மகன் ஒருவர் பாட்டுப்பாடி உற்சாகப்படுத்தும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கும் தந்தையிடம் அவரது மகன், நான் என்ன பாட்டு பாடுகிறேன் என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்பதை பாருங்கள் என்று கூறுகிறார்.அப்படியே பாட்டுப்பாடவா, பாடம் சொல்லவா, பறந்து செல்லவா என்று விசிலில் பாடுகிறார்.
இந்த வீடியோவை பார்த்து பலரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். தளர்ந்து படுக்கையில் விழும் காலத்தில் அன்பு செலுத்தும் இதைப்போல் பிள்ளைகளைப் பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள் தான் என்று கூறுகிறார்கள். உண்மை தான் வயதான காலத்தில் பெற்றோரை பாரமாக நினைக்காத பிள்ளைகள் கிடைப்பது தான் அவர்களுக்கு மிகப்பெரிய வரம். வாரிசு படத்தில் சொல்லப்படுவது போல் நிம்மதியான சாவு கிடைப்பது தான் வயதான பெற்றோருக்கு மிகச்சிறந்த மருந்தாக இருக்கும். ஆனால் அவர்கள் ஏன் இன்னமும் நாம் பூமியில் வாழ்கிறோம் என்று நினைக்கும் நிலை வந்தால் , அந்த வாழ்க்கை என்பது நரகத்தைவிட மோசமானது மட்டுமல்ல.. அது அவர்களுக்கு பெரிய சோகமாகும்.
நூறு வயது தந்தைக்கு
— செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.. (@selvachidambara) February 16, 2023
எழுபது வயதுமகன் பாடல் பாடி உற்சாகப்படுத்தும் காட்சி.தளர்ந்து படுக்கையில் விழும் காலத்தில் அன்பு செலுத்தும் இதைப்போல் பிள்ளைகளைப் பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள் ❣️👌 pic.twitter.com/giFxBKNa6x
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications