என்னையும், மகனையும் கைவிட்டுவிட்டார்.. சோஹோ ஸ்ரீதர் வேம்பு மீது மனைவி பரபர புகார்.. என்ன நடந்தது?
இது தொடர்பாக பிரபல ஃபோர்ப்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை: பிரபல சோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் மீது அவரின் மனைவி பிரமிளா ஸ்ரீனிவாசன் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக பிரபல ஃபோர்ப்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னையில் சோஹோ நிறுவனத்தை நடத்தி வரும் ஸ்ரீதர் வேம்பு தமிழ்நாட்டில் பல்வேறு சிறிய நகரங்களில் அலுவலகங்களை தொடங்க உள்ளார். உள்ளூர் மக்களுக்கு வேலை கொடுப்பது, மாணவர்களை படிக்க வைப்பது என்று இவர் பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.
அதே சமயம் இவரின் அரசியல் ரீதியான சில கருத்துக்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அமெரிக்காவில் சோஹோ நிறுவனத்தை நடத்தி வந்த ஸ்ரீதர் வேம்பு சான் பிரான்சிசுகோவில் வசித்து வந்தார்.

ஸ்ரீதர் வேம்பு
அங்கே அவர் தனது மனைவி பிரமிளா ஸ்ரீனிவாசனுடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 2020ல் ஸ்ரீதர் வேம்பு தமிழ்நாட்டிற்கு நகர்ந்தார். அதில் இருந்து இவர் தமிழ்நாட்டில் வசித்து வருகிறார். மதளம்பாறை கிராமத்தில் இவர் வசித்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு 5 பில்லியன் டாலர் என்று போர்ப்ஸ் தெரிவித்து உள்ளது. நான் கிராமத்தில் வாசிக்க விரும்புகிறேன். என்னுடைய ஊழியர்கள் கிராமத்தில் இருப்பதையும் விரும்புகிறேன். எனக்கு நிறைய விவசாய திட்டங்கள் இருக்கின்றன. அதை மேற்கொள்வேன் என்று இவர் குறிப்பிட்டு இருந்தார். கிராமங்களை வளர்க்க வேண்டும் என்று நான் தமிழ்நாட்டிற்கு வந்தேன் என்று ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டு இருந்தார்.

சிக்கல்
இந்த நிலையில்தான் ஸ்ரீதர் வேம்புவின் மீது அவரின் மனைவி பிரமிளா ஸ்ரீனிவாசன் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக பிரபல ஃபோர்ப்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், என் கணவருடன் நான் 29 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்தேன். அவர் இப்போது என்னை கைவிட்டுவிட்டார். என் மகனுக்கு உடல் ரீதியாக சில பாதிப்புகள் உள்ளன. ஆனால் எங்களை ஸ்ரீதர் கவனிக்கவில்லை என்று கூறி உள்ளார். இது தொடர்பாக கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்துள்ளார். அதோடு எங்களுக்கு என்று பொதுவாக இருந்த சில சொத்துக்களை, சில பங்குகளை, அவர் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றிவிட்டார். முறையின்றி இதை செய்துள்ளார்.

பணம்
இதற்காக முறையாக தொகையை கொடுக்காமல் அவர் சொத்துக்களை மாற்றி உள்ளார். அதோடு எனக்கு தேவையான தொகையை அவர் கொடுக்கவில்லை. என்னிடம் கேட்காமல், என்னிடம் சொல்லாமல் அவர் முறையின்றி பங்குகளை மாற்றி உள்ளார். கலிஃபோர்னியாவில் உள்ள குடும்ப சொத்து சட்டம், திருமணத்தின் போது கணவன் - மனைவி தங்கள் இணையின் ஒப்புதலைப் பெறாமல் ரகசியமாக சொத்துக்களை மாற்ற முடியாது. 'குடும்ப' சொத்து என்பது கூட்டு சொத்து என்று கூறப்பட்டு உள்ளது.இதை மீறி ஸ்ரீதர் வேம்பு சொத்துக்களை தனது குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றி உள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது.

பதில்
இதற்கு ஸ்ரீதர் வேம்பு பதில் ஃபோர்ப்ஸ் நிறுவனத்திற்கு அளித்துள்ளார். அதில், நான் யாருக்கும் எந்தப் பங்குகளையும் மாற்றவில்லை, மேலும் என் நிறுவனங்களில் எனது நிதி ஆர்வம் எப்போதும் குறையவில்லை. கிராமப்புற மேம்பாடு மற்றும் மறுமலர்ச்சிக்காக என்னை அர்ப்பணிப்பதற்காக நான் இந்தியாவுக்குச் சென்றேன். மற்றபடி இதில் வேறு எதுவும் காரணம் இல்லை. நான் பிரமிளை தமிழ்நாடு வர சொன்னேன். அவர் வரவில்லை. என் மகனும் இதனால் அங்கேயே இருக்கிறார். நான் அவர்களை கைவிடவில்லை. அவர்களுக்கு பண ரீதியாக உதவிகள்செய்யாமல் இல்லை , என்று ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications