ஒரு சீட்டுக்கு அதிமுகவில் அடிதடி.. எனக்கு சீட் தாருங்கள்.. வேதனையாக உள்ளது.. தமிழ் மகன் உசேன் கடிதம்
ராஜ்ய சபா சீட்டுக்காக அதிமுகவில் போட்டி ஏற்பட்டு வருகிறது.
Recommended Video
சென்னை: இருக்கும் ஒரே ஒரு ராஜ்ய சபா சீட்டுக்கு அதிமுகவில் ஏகப்பட்ட போட்டா போட்டி நடந்து வருகிறது. அந்த வகையில், இந்த சீட் ரேஸில் கலந்து கொண்டிருப்பவர் தமிழ் மகன் உசேன்தான்!
நடந்து முடிந்த தேர்தலின்போது அதிமுகவுடன் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்தன. அப்போது பாமகவுக்கு 7+1 என்று ஒப்பந்தம் கையெழுத்தானது. அதேபோல 5 இடங்களில் தோற்றாலும் தங்களுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் வேண்டும் என்று பாஜக கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இப்போதுள்ள சூழலில் அதிமுகவில் 3 ராஜ்ய சபா சீட்டுக்களே சாத்தியம் என்ற நிலை உள்ளது. அதன்படி பாமகவு, பாஜகவுக்கு ஒன்று போக மீதமுள்ளது ஒன்றுதான். இந்த ஒன்றுக்கும் கட்சிக்குள் கடும் போட்டி ஏற்பட்டு வருகிறது.

அன்வர் ராஜா
இதில் தம்பிதுரை, மைத்ரேயன், கோகுல இந்திரா, பொன்னையன், என பலர் வரிசையில் உள்ளனர். ஒருசிலரோ தங்களுக்குதான் அந்த ராஜ்ய சபா சீட் வேண்டும் என்று வெளிப்படையாகவே முதல்வருக்கு கடிதம் எழுதி விண்ணப்பித்தனர். அதில் ஒருவர் அன்வர் ராஜா ஆவார்.

முதல்வருக்கு கடிதம்
அந்த வரிசையில் தமிழ் மகன் உசேனும் சேர்ந்துள்ளார். இவர் அதிமுக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஆவார். மேலும் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளராகவும் உள்ளார். இவர் முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் சொல்லி இருப்பதாவது:

வேதனையாக உள்ளது
"கடந்த 65 ஆண்டுகளாக அதிமுகவில் உள்ளேன். எம்ஜிஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே பல்வேறு கட்சி பணிகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். தற்போது எனக்கு 81 வயதாகிறது. இதுவரை சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியதில்லை. எனக்கு இது வேதனையாக உள்ளது.

உழைப்பு
அதிமுகவில் இதுவரை நான் ஆற்றிய பணிகளை எண்ணி பார்த்து, எனது உழைப்பையும், தியாகத்தையும், முதுமையையும் கருதி, இஸ்லாமியனாகிய எனக்கு வருகிற ஜூலை மாதத்தில் நடைபெற இருக்கும் மாநிலங்களவை தேர்தலில் எம்பி பதவியை அதிமுக சார்பில் எனக்கு வழங்க வேண்டும்" என்று கேட்டுள்ளார்.

இஸ்லாமியர்கள்
நடந்து முடிந்த தேர்தலில் இஸ்லாமியர்களுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை என்பது ஏற்கனவே சர்ச்சையாக பேசப்பட்டது. இந்நிலையில், ராஜ்ய சபா சீட்டாவது தங்களுக்கு வேண்டும் என்று கட்சியின் சீனியர்கள் குறிப்பாக இஸ்லாமிய பெருமக்கள் வெளிப்படையாகவே குரல் எழுப்பி வருவதை அதிமுக தலைமை பரிசீலிக்குமா என்பது இனிதான் தெரியவரும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications