Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட.. அரசுப் பள்ளியில் ‘சீட்’ வாங்க இவ்வளவு டிமாண்டா? குவியும் பெற்றோர்கள்.. அப்படி என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை : பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சீட் வாங்குவதற்கு கடும் போட்டி நிலவி வருகிறது. தனியார் பள்ளிகளில் சீட் வாங்க பெற்றோர்கள் பல லட்சங்களைக் கொட்டி வரும் நிலையில், அரசுப் பள்ளியில் சீட் வாங்க இங்கு போட்டி நடக்கிறது.

தமிழ்நாட்டில் 10, 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. பள்ளிகள் வரும் ஜூன் 7ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், தற்போது தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Heavy demand to get set in government school in chennai

அசோக் நகர் பள்ளி : இந்நிலையில் சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 'சீட்' வாங்க கடுமையான போட்டி நிலவுகிறது. தற்போது அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை துவங்கி நடைபெற்று வருகிறது. இங்கு மாணவர்களைச் சேர்க்க பெற்றோர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தங்கள் மகள்களை சேர்க்க 2 நாட்களாக பெற்றோர்களின் கூட்டமானது அலைமோதி வருகிறது. 6ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்புகளில் மாணவிகளை சேர்க்க பெற்றோர் விண்ணப்பங்களை பெற தனியாக டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

செம டிமாண்ட் : இந்த நிலையில், இந்த டோக்கன்களை பெற அன்றாடம் நூற்றுக்கணக்கான பெற்றோர் பள்ளியில் நீண்ட வரிசையில் நின்று வருகின்றனர். அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு இவ்வளவு டிமாண்ட் நிலவுவது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.

அரசுப் பள்ளியான இங்கு நவீன தொழில்நுட்ப வசதியுடன் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையான உள்கட்டமைப்பு வசதி மற்றும் தரமான கல்வி வழங்குவதே இந்தப் பள்ளியில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க விரும்புவதற்குக் காரணம் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தகைசால் பள்ளி : தமிழ்நாட்டில் 28 அரசுப் பள்ளிகளை தேர்ந்தெடுத்து தகைசால் பள்ளிகளாக உருவாக்க இருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார். அதில், சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளியும் ஒன்று. இந்தப் பள்ளியை தகைசால் பள்ளியாக மேம்படுத்த 6 கோடியே 5 லட்சத்து 8 ஆயிரத்து 430 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Heavy demand to get set in government school in chennai

தகைசால் பள்ளிகளில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கணினிகள் கொண்ட ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படவுள்ளன. அரசின் முன்னோடித் திட்டமான தகைசால் பள்ளிகள் மூலம் தனியார் பள்ளிகளுக்கு இணையான நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கல்வி கற்கும் சூழல் ஏழை மாணவர்களுக்கு கிடைக்கும்.

அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஹை-டெக் வசதிகளோடு தனியார் பள்ளிகளில் இருக்கும் வசதிகளை மிஞ்சும் அளவுக்கு உருவாகி வருவதால் இங்கு மாணவர் சேர்க்கைக்கு கடும் டிமாண்ட் நிலவுவதாகத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+