கொட்டும் மழையில் கோட் போட்டுக் கொண்டு களமிறங்கிய மேயர் பிரியா.. அடைமழையிலும் விடாமல் பணி
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து பொதுமக்களிடம் வரும் அழைப்புகளை நேரடியாக மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் கண்காணித்து வருகிறார். இது ஒருபுறம் எனில் மழைநீர் தங்கு தடையின்றி செல்வதை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பல்வேறு பகுதிகளில் நேரடியாக சென்று கண்காணித்து வருகிறார்.
சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.. இன்று காலை 9 மணிக்கு ஆரம்பித்த மழை மாலை 4 மணி வரையிலும் விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. சென்னையில் மழை பெய்தால் சாலைகளில் தண்ணீர் தேங்குவது இயல்பு.. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும். தண்ணீர் வெளியேற வழியில்லாத பகுதிகளிலும் தண்ணீர் தேங்கும். அதுபோல் தண்ணீர் தேங்கும் இடங்களை ஏற்கனவே அடையாளம் கண்ட சென்னை மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்களுடன் சென்று பல்வேறு முன்னேற்பாடுகளை செய்தனர்..

சாலைகளில் எங்கெல்லாம் பள்ளம் அதிகமாக ஏற்படுகிறதோ, வார்டு வாரியாக கண்காணித்து, சாலைகளில் சல்லியை கொட்டி சமப்படுத்தும் பணிகள் நடந்தது. சென்னையில் மோசமான பள்ளம் ஏற்பட்ட பல்வேறு பகுதிகளில் இந்த பணிகள் நடந்தது.
முன்னதாக இன்று காலை மழை பெய்ய தொடங்கிய உடனேயே சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சியின் உயர் அதிகாரிகள், மண்டல அதிகாரிகள், பொறியாளர்கள் ஆகியோர் தலைமையில் இன்று காலை ஆலோசனை கூட்டம் நடந்தது. வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் களப்பணி நடவடிக்கைகள், மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட சுரங்கப்பாதைகளை கேமராக்கள் மூலம் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து களத்திற்கு சென்று ஒவ்வொரு பகுதியாக முன்னேற்பாடு பணிகளை கண்காணித்தனர். இராயப்பேட்டை ஜி.பி.சாலையில் உள்ள வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் மழைநீர் தங்குதடையின்றி செல்லும் பணியினை மேயர் பிரியா , மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதேபோல திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட டெமல்லஸ் சாலையில் உள்ள நீரேற்று நிலையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வெளியேற்றும் பணிகள் விரைவாக செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, அங்காளம்மன் கோயில் தெருவில் உள்ள மழைநீர் வடிகாலில் மழைநீர் சீராக வெளியேற்றும் பணியையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதேபோல் திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட ஸ்டீபன்சன் சாலை செங்கை சிவம் மேம்பாலத்தின் அருகில் நீர் வெளியேற்றும் நிலையத்தின் மூலம் ஓட்டேரி நல்லா கால்வாயில் மழைநீர் வெளியேற்றும் பணி நடந்தது. வடசென்னையில் பொதுவாக தண்ணீர் தேங்கும் திரு.வி.க சாலையில் (ஜி.பி. ரோடு) சென்ற ஆண்டு வடகிழக்கு பருவ மழையின்போது 2 அடி தண்ணீர் தேங்கிய நிலையில் நேற்று முதல் பெய்து வரும் கனமழையில் தண்ணீர் தேங்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் சென்ற ஆண்டு மழையின் போது தண்ணீர் தேங்கிய பாரிமுனை, பிராட்வே ரோடு - பிரகாசம் சாலையில் புதிய மழைநீர் வடிகால் கட்டியதால் இந்த ஆண்டு தண்ணீர் தேங்காத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் எங்கெல்லாம் தண்ணீர் தேங்கும், எங்கெல்லாம் பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை கண்டறிந்து அந்த இடங்களில் தனிகவனம் செலுத்தியதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இதனிடையே திநகர் உள்பட சில இடங்களில் மரம் முறிந்து விழுந்தது. அதனை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அம்பத்தூர், சைதாப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை என ஒவ்வொரு இடத்திலும் தீவிரமாக கண்காணித்து மழை நீர் தேங்காத அளவிற்கு நடவடிக்கை எடுத்தனர்.

சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால், மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தெரிவிக்க சென்னை மாநகராட்சி சார்பில் தொலைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.. அந்த மையத்திற்கு வரும் அழைப்புகளை மேயர் பிரியா நேரில் ஆய்வு செய்தார். பொதுமக்களின் தொலைப்பேசி அழைப்புகளுக்கு மேயர் பதில் அளித்து பேசினார்.. ஏராளமானோர் மாநகராட்சிக்கு அழைத்து குறைகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். மாநகராட்சி பணியாளர்கள் விரைந்து சென்று அந்த இடங்களில் எல்லாம் தண்ணீர் செல்ல வழிகளை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆபத்தான பள்ளம் உள்ள சாலைகளில் சல்லி கற்களை கொட்டு சமப்படுத்தும் பணிகளையும் செய்து வருகிறார்கள்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications