இரவு முழுக்க பெய்த மழை.. இன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.
Recommended Video
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.
வடகிழக்கு பருவமழை தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இதனால் கனமழை பெய்து வருகிறது.
சென்னைக்கு அருகே ஆந்திராவின் பக்கத்தில் இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் தற்போது மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காவிரியில் வெள்ளம்.. 2 மாதங்களில் 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. வெள்ள அபாய எச்சரிக்கை!
வலுவடையும்
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை போக போக வலுவடையும். இன்று இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. அதன்பின் புயலாக மாறும். ஆனால் இந்த புயல் சென்னையை தாக்காது.
பெரும் மழை
இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தற்போது தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நீலகிரி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. கன்னியாகுமரியில் கடல் சீற்றத்துடன் மழையும் பெய்தது.
மிக கனமழை பெய்தது
அதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, கோவையில் மிக கனமழை பெய்தது. சென்னையில் இரவு நேரத்தில் சாரல் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. நீலகிரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் தற்போதும் மழை பெய்து வருகிறது.
இன்றும் பெய்யும்
அதேபோல் இன்றும் டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யும். இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த கனமழை நீடிக்கும். சென்னையில் இன்றிலிருந்து மழை தீவிரம் அடையும் என்று கூறப்பட்டுள்ளது.