சில்லென்ற மழையால் ஜில்லென மாறிய மாவட்டங்கள்.. நாளை தமிழகத்தில் இடிமழை இருக்காம்
சென்னை: சில்லென பெய்த மழையின் காரணமாக ஜில்லென மாறி உள்ளது தமிழகத்தின் தென் மாவட்டங்கள். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அனல் காற்று வீசி மக்களை புழுக்கதால் சூரிய பகவான் ஒரு பக்கம் நனைத்து வருகிறார். அதேநேரம் மாலை மங்கும் வேளைகளில், வருண பகவானின் ஓரக்கண் பார்வை தமிழகத்தின் சில இடங்களில் வீசி சென்றுவருவதால், மழை தேவதை ஆங்காங்கே பூமியை நனைத்து செல்வதோடு, மக்களின் இதயங்களையும் நனைத்து சென்று வருகிறாள்.

அப்படித்தான் தென்மாவட்டங்களில் மழை தேவதையின் வருகை இன்று அற்புதமான மேகங்களின் வரவேற்புடன் நிகழ்ந்தது. மரங்கள் வேகமாக ஆசைந்து ஆடி காற்றினை துயில்த்து எழ வைத்தன. காற்றுகள் ஓடி ஓடி ஒவ்வொரு வீட்டுக்கதவையும் தட்டிச் சென்றன. அதன் பின் மண்ணின் வாசனைக்கு மயங்கி மழை தேவதை தென் மாவட்டங்களை நனைத்து சென்றாள்.
இதேபோல் நெல்லை மாவட்டம் தென்காசி, குற்றாலம், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், வடகரை உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணி நேரமாக பலத்த காற்றுடன் மழை கொட்டியது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியது.
மதுரையில் கோரிப்பாளையம், அண்ணா நகர், கே.கே.நகர், புதூர் உள்ளிட்ட பல இடங்களில் இன்று பரவலாக மழை பெய்தது. இதேபோல் தேனி மாவட்டம் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், கூடலூர் உள்ளிட்ட இடங்களில் சூறை காற்றுடன் இன்று மழை பெய்தது. கம்பம் அரகே நாராயணதேவன்பட்டியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதேபோல் நேற்று இரவு, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய உள்ளது. உள் மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு அனல் காற்று அதிகம் வீசுக்கூடும். வெப்பநிலை வழக்கத்தை விட நான்கில் இருந்து 6 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் பீளமேட்டில் 6 செ.மீ மழையும், பொள்ளாச்சி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டாபுரத்தில் தலா 5 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications