ஆஹா.. வந்திருச்சுயா மழை.. சென்னையில் கொட்டிய கன மழை.. வாகன ஓட்டிகள் கடும் அவதி
சென்னை: சென்னைவாசிகள் கொடுத்த வைத்தவர்கள் தான் போல்... அடிக்கடி மாலை நேரத்தில் மழை வந்து மக்களையும் பூமியையும் குளிர வைத்து வருகிறது.
அந்த வகையில் இன்று மாலை திடீரென லேசாக தொடங்கிய மழை பல இடங்களில் கனமழையாக மாறி பெய்தது. போரூர், பூந்தமல்லி, வளசரவாக்கம், மாதவரம், கொளத்தூர் பகுதிகளில் மழை பெய்தது.

இதேபோல் அண்ணாநகர், சூளைமேடு, சாலிகிராமம், தியாகராய நகர், நுங்கம்பாக்கம் பகுதியில் மழை பெய்தது.
மேலும் வில்லிவாக்கம், எழும்பூர், தேனாம்பேட்டை, நந்தனம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது,.
சென்னை மாநகரம் முழுவதும் பெய்து வரும் இந்த திடீர் மழையால் பல இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. சென்னையின் முக்கிய சாலைகள் போக்குவரத்து நெரிசலில் திணறியது. இதனால் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு செல்ல முடியாமல் பலர் அவதிக்குள்ளாகினர்
அடிக்கடி மாலை நேரங்களில் வெப்பச்சலனம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழையால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications