இதுதான் ரூட்.. இங்கெல்லாம் மழை பெய்ய போகுது.. சென்னைக்கு குட்நியூஸ் சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: சென்னையில் நிலவி வரும் மோசமான வெப்பநிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் போஸ்ட் செய்துள்ளார்.
சென்னையில் மழை பெய்யுமா என்பது தொடர்பாக அவர் கணிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் செய்துள்ள போஸ்டில், வட-தெற்கு நகரும் புயல்களால் சென்னை மழையை தவறவிட்டது. ஆனால் தற்போது மேகமூட்டமான வானிலை காரணமாக இன்று மழை பெய்யும். திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது. கடந்த 10 நாட்களாக 40+C வெப்பநிலையுடன் இங்கே கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில்தான் தற்போது நல்ல மழை பெய்தது.

தற்போது காஞ்சிபுரம் - ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் புயல் காற்று நகர்ந்து வருகிறது. இன்று வட உள் தமிழ்நாடு மற்றும் மேற்கு தமிழ்நாடு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், மேற்கு திருவண்ணாமலை பகுதிகள் மழையை பெறும்.
பெங்களூரில் RCB போட்டி இந்த மழை செல்லும் பாதையில் விழுகிறது. இந்த மழை காரணமாக எத்தனை ஓவர்கள் இழக்கப்படும் அல்லது போட்டிக்கு என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சென்னை வானிலை:
சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.
சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது.
சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.
இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்க உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயரும் வாய்ப்புகள் உள்ளன.
வரும் நாட்களில் வெப்பநிலை பல மாநிலங்களில் 100 டிகிரி பேரன்ஹீட்டை தொட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த 3-5 நாட்களில் வடகிழக்கு இந்தியா மற்றும் மேற்கு இமயமலைப் பகுதியைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த கடுமையான வெப்பநிலை நிலவும். தென் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழ்நாட்டு பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழை பெய்யும்.
ஆனால் மற்ற இடங்களில் வெயில் வாட்டி வதைக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications