சென்னையில் அடுத்த 2 மணி நேரம் முக்கியம்.. நாள் முழுக்க செம மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்!
சென்னையில் இன்று நாள் முழுக்க கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.
Recommended Video
சென்னை: சென்னையில் இன்று நாள் முழுக்க கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழை காரணமாக தமிழகத்தில் சென்னை, நாகை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கல்லூரிகளுக்கு , நிர்வாகமே முடிவு செய்து கொள்ளலாம் என்று ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
விடிய விடிய பொளந்து கட்டிய மழை.. வெள்ளக்காடாக மாறிய சாலைகள்.. சென்னை மக்கள் அவதி!
சென்னை நிலை
இந்த நிலையில் சென்னையில் தொடர்ந்து மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் நேற்று இரவு மழை தொடங்கியது. ஆனால் இன்னும் அங்கு மழை விடவில்லை. பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
எங்கு எல்லாம்
சென்னையில் தற்போது கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சோழவரம், தாம்பரம், குரோம்பேட்டை, வேளச்சேரி, எழும்பூர், அண்ணா சாலை, வடபழனி, சைதாப்பேட்டை, தி நகர், கோயம்பேடு, அடையாறு, அண்ணா நகர் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு 10 மணிக்கு அங்கு மழை தொடங்கியது.
இன்று எப்படி
அதேபோல் சென்னையில் இன்று நாள் முழுக்க கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. அதிலும் அடுத்த இரண்டு மணி நேரம் முக்கியம். அடுத்த இரண்டு மணி நேரம் தீவிர கனமழை பெய்யும்.மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
கடல் எப்படி
இந்த மழை காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. இதனால் மக்கள் யாரும் பீச் பக்கம் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் மீனவர்களும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.