4.5 செமீக்கு கடல் அலை.. பலத்த காற்று.. தமிழகத்தில் இன்றிலிருந்து கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்றில் இருந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை; தமிழகத்தில் இன்றில் இருந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
கடந்த வாரம் வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த தாழ்வு நிலை தற்போது வலுவடைந்து வருகிறது.இதனால் கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இன்னொரு பக்கம் தற்போது வடமேற்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் வானிலை மையம் கணித்தது போலவே தற்போது வடமேற்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது.
தீவிரமடையும் மழை.. தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை.. வேகமாக நிரம்பும் அணைகள்!
தமிழகம் மழை
இதனால் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. நேற்று இரவில் இருந்தே தமிழகத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று இரவு சென்னையிலும், டெல்டா மாவட்டங்களிலும் இரவு முழுக்க மழை பெய்தது.
இன்று எப்படி
இந்த நிலையில் இன்று கேரளா, தெற்கு கர்நாடகா, தமிழகத்தில் இருக்கும் மலையோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.தமிழகத்தில் உள்மாவட்டங்களில் லேசான மழை பெய்ய கூடும். என்று வானிலை மையம் கூறியுள்ளது . அதிலும் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி எப்படி
அதே சமயம் கேரளாவை ஒட்டி இருக்கும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு பெய்தது போலவே இன்று மாலைக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவாவூர், தஞ்சாவூர் , கடலூர் , புதுக்கோட்டை , பட்டுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடல் எப்படி
இன்று அதேபோல் லட்சத்தீவு பகுதியிலும், வங்கக்கடலில் மிக அதிக வேகத்தில் காற்று வீசும். 55 கிமீ வேகம் வரை காற்று செல்லும். கடலும் கொந்தளிப்பாக காணப்படும். கடல் மொத்தமாக 4.4 மீட்டர் உயரம் வரை எழும்ப கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எவ்வளவு மழை
தமிழகத்தில் நேற்று பெய்த மழை நிலவரம்;
- கோவை சின்னக்கல்லார் 13செ.மீ
- சேலையூர் 11செ.மீ
- மேல் பவானி 7செ.மீ
- நீலகிரி 34செ.மீ
- அவளாஞ்சி 11செ.மீ
- கூடலூர் பஜார் 8 செ.மீ
- மேல் கூடலூர் 6 செ.மீ
- பந்தலூர் 19செ.மீ
- ஹாரிசன் 18செ.மீ மழை பெய்துள்ளது.