இன்று 15, நாளை 9 மாவட்டங்கள்.. கன மழை பெய்யப்போகும் பகுதிகள் இவைதான்! வானிலை மையம் தந்த பட்டியல்
Recommended Video
சென்னை: தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும். நாளை 9 மாவட்டங்களில் கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரு நாட்களுக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல், மிதமான மழை பெய்யும்.
வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை காண வாய்ப்பு உள்ளது.
நடுரோடு.. ஃபுல் மப்பு.. பிரியாணி பொட்டலம்.. பெரிய மனுஷன் மாதிரி இருக்கீங்களே.. இப்படி செய்யலாமா!
கடந்த 24 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் கன மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரத்தில் 16 செ.மீ மழையும், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் 14 சென்டிமீட்டர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 11 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
வலிமையான காற்று வீசும் என்பதால், குமரி கடல் பகுதி, மாலத்தீவு மற்றும் தமிழகத்தின் தெற்கு கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று, மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.