அத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி!
Recommended Video
சென்னை: இன்றைய தினம் பெருமாளுக்கு உகந்த நாள் என்பதாலும் மோடி வருகையால் தரிசனம் ரத்து என்ற வதந்தியாலும் அத்திவரதரை தரிசிக்க இரண்டரை லட்சம் பேர் ஒரே நேரத்தில் திரண்டதே காஞ்சிபுரத்தில் 4 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சோக சம்பவத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் குளத்தில் இருந்து எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி முதல் தொடங்கிய இந்த வைபவத்தை இதுவரை 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டு களித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று அத்திவரதரை தரிசிக்க வந்த 4 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சோக சம்பவம் நடந்தேறியுள்ளது. மேலும் காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிக்கு திரண்ட மக்கள்
இதற்கு காரணம் என்னவெனில் இன்று திருவோணம் நட்சத்திரம் என்பதாலும் அது பெருமாளுக்கு உகந்த நாள் என்பதாலும் காஞ்சிபுரத்துக்கு ஏராளமானோர் திரண்டனர்.

பயணிகள்
கூட்ட நெரிசலால் பேருந்துகளும் தற்காலிக பேருந்து நிலையத்துக்கு செல்ல முடியாமல் மூங்கில் மண்டபம் நிறுத்தத்திலேயே பயணிகளை இறக்கவிட்டன. இதையடுத்து அங்கிருந்கு கோயிலுக்கு ஏராளமானோர் நடந்தே சென்றனர்.

கூட்ட நெரிசல்
இந்த நிலையில் அத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி அடுத்த வாரம் வருகை தரவுள்ளதாலும் அதையொட்டி 2 நாட்களுக்கு பொது தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும் வதந்தி பரவியதே இன்று ஒரே நாளில் கூட்ட நெரிசலுக்கு காரணம் என கூறப்படுகிறது.

விரட்டி அடித்த போலீஸ்
இந்த கூட்டத்தால் காஞ்சிபுரம் தெற்கு மாட வீதியில் இன்று காலை முதலே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வரிசையையும் தாண்டி பக்தர்கள் சென்றதால் போலீஸார் அவர்களை விரட்டி அடித்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா கூறுகையில் மோடி வருகையால் பொது தரிசனம் ரத்து என்ற தகவல் வதந்தியாகும். மக்கள் யாரும் வதந்திகளை நம்பாதீர் என தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications