ரயில் கழிவறையில் கண்டெடுத்த பெண் குழந்தை.. தம்பதியின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!
சென்னை: ரயில் கழிவறையில் கண்டெடுத்து வளர்த்த ஒன்றரை வயது பெண் குழந்தையை தங்களிடமே ஒப்படைக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் தம்பதி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு நெல்லை - ஈரோடு ரயிலின் கழிவறையில் ரவி - சாவித்ரி தம்பதி, கண்டெடுத்த பெண் குழந்தையை அவர்கள் வளர்த்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் குழந்தை மீட்கப்பட்டு காப்பகத்தில் குழந்தைகள் நலக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, ரயில் கழிவறையில் கண்டெடுத்து வளர்த்த ஒன்றரை வயது பெண் குழந்தையை தங்களிடமே ஒப்படைக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரவி - சாவித்ரி தம்பதியர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. குழந்தையை தத்தெடுக்க விண்ணப்பித்ததன் மூலம் மட்டும் குழந்தையை வளர்ப்பு மகளாக அறிவிக்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டு, அவர்களின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications