போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை.. போலீஸ்க்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை: சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டத்தை நடத்த அனுமதிக்க முடியாது என்றும், அனுமதிக்கப்பட்ட இடத்தில் தூய்மை பணியாளர் போராட்டங்களைதொடர அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. 13-வது நாளாக இன்றும் தூய்மை பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 13 வது நாளாக இன்றும் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தேன்மொழி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அனுமதிக்கப்படாத இடத்தில் தூய்மை பணியாளர்கள் போராட அனுமதி கிடையாது என்று கூறியது.
மேலும் அனுமதி இன்றி சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவிட்டனர். மேலும் அனுமதிக்கப்பட்ட இடத்தில் தூய்மை பணியாளர்கள் போராட எந்த தடையும் இல்லை எனவும், அங்கு அவர்கள் போராட்டத்தை தொடரலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
எனினும் தூய்மை பணியாளர்கள் எங்களது கோரிக்கைகள் நிறைவேறாதவரை இங்கிருந்து கிளம்ப மாட்டோம் என்றும் தொடர்ந்து போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications