போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை.. போலீஸ்க்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை: சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டத்தை நடத்த அனுமதிக்க முடியாது என்றும், அனுமதிக்கப்பட்ட இடத்தில் தூய்மை பணியாளர் போராட்டங்களைதொடர அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. 13-வது நாளாக இன்றும் தூய்மை பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 13 வது நாளாக இன்றும் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தேன்மொழி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அனுமதிக்கப்படாத இடத்தில் தூய்மை பணியாளர்கள் போராட அனுமதி கிடையாது என்று கூறியது.
மேலும் அனுமதி இன்றி சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவிட்டனர். மேலும் அனுமதிக்கப்பட்ட இடத்தில் தூய்மை பணியாளர்கள் போராட எந்த தடையும் இல்லை எனவும், அங்கு அவர்கள் போராட்டத்தை தொடரலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
எனினும் தூய்மை பணியாளர்கள் எங்களது கோரிக்கைகள் நிறைவேறாதவரை இங்கிருந்து கிளம்ப மாட்டோம் என்றும் தொடர்ந்து போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications