போராட்டங்களுக்கு கெடுபிடி போட்ட போலீஸ்! புதிய தமிழகம் விஷயத்தில் இறுக்கி பிடித்தது நீதிமன்றம்!
சென்னை: புதிய தமிழகம் கட்சி பேரணிக்கு முந்தைய நாள் அனுமதி மறுத்தது குறித்து விளக்கம் அளிக்கும்படி சென்னை காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவில், "அருந்ததியருக்கான 3% உள் ஒதுக்கீட்டை ரத்து செய்வது, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி சென்னை மன்றோ சிலையில் இருந்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வரை பேரணி நடத்த அனுமதி கோரி எங்கள் கட்சியின் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு விண்ணப்பித்திருந்தோம்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விண்ணப்பம் அளித்த நிலையில், குறிப்பிட்ட அந்த வழித்தடத்தில் பேரணிக்கு அனுமதி இல்லை எனக் கூறி, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் இருந்து பேரணி நடத்தும் வகையில் வழித்தடத்தை மாற்றிக் கொள்ளும் படி காவல் துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்.
அதன் அடிப்படையில் 2024 நவம்பர் 7ஆம் தேதி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து நேரடியாக சென்று தமிழக ஆளுநரை சந்தித்து மனு அளிப்பது என்று அறிவித்த நிலையில், முந்தைய நாளான 2024 நவம்பர் 6ஆம் தேதி பேரணிக்கு அனுமதி மறுத்து காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை பிறப்பித்த அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்" என்றும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்த போது, மூன்று வாரங்களுக்கு முன்பே பேரணிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தும் ஆளுநரின் நேரத்தை பெற்றும் இருந்த நிலையில் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது சட்ட விரோதமானது என்றும், பேரணிக்காக திருநெல்வேலி தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த கட்சியினரை காவல்துறையினர் மலை என பார்க்காமல் கைது செய்து மண்டபங்களில் அடைத்ததாகவும் டாக்டர் கிருஷ்ணசாமி வாதிட்டார்.
இந்த மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடைசி நேரத்தில் பேரணிக்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டால் என்ன அர்த்தம்? காவல்துறை அரசியல் ஏஜென்சி அல்ல அரசு ஏஜென்சி. பேரணிக்கு அனுமதி அளிப்பதோ, மறுப்பதோ வேறு விஷயம். அதை உரிய காலத்திற்கு முன்பே தெரிவித்திருக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி, மனுவுக்கு பதில் அளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜனவரி 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
சமீப காலமாக போராட்டங்களுக்கும், பேரணிக்கும் காவல்துறையினர் அனுமதியை வழங்குவதில்லை என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், புதிய தமிழகம் கட்சி தொடர்ந்த வழக்கில் காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருப்பது கவனத்திற்கு உள்ளாகியுள்ளது.
-
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்












Click it and Unblock the Notifications