திடீரென சென்னை, கோவையில் உயரும் தொற்று.. என்ன காரணம்.. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
கோவையில் தடுப்பூசி செலுத்தும் பணி துரிதமாகி வருகிறது
சென்னை: தமிழகத்தில் கோவையிலும், சென்னையிலும் கொரோனா தொற்று விகிதம் அதிகரித்துள்ளது பீதியை கிளப்பி வருகிறது.
தற்போது தொற்று பாதிப்பானது தமிழகம் முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.. ஆனாலும் ஒருசில மாவட்டங்களில் தொற்று மீண்டும் தலைதூக்கி வருகிறது.
நேற்று மட்டுமே ஒருநாள் பாதிப்பு என்பது 1,575-லிருந்து குறைந்து 1,592 ஆக பதிவாகியுள்ளதுதான் அதிர்ச்சியை தந்துள்ளது.. இது நேற்று முன்தினம் எண்ணிக்கையை விட கொஞ்சம் அதிகமாகும்... நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,62,119 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

உயிரிழப்பு
சென்னையில் மட்டும் நேற்று 165 பேருக்கு கொரோனா கேஸ் பதிவாகி உள்ளது.. அதேசமயம், நேற்று முன்தினம், சென்னையில் ஒருநாள் பாதிப்பு என்பது 167 என்று இருந்த நிலையில், நேற்று குறைந்துள்ளது.. எனினும், தமிழகத்தில் ஒரேநாளில் நேற்று 18 பேர் உயிரிழந்துள்ளனர்.. சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,282 ஆக உள்ளது.

கோவை
கோவையில் ஒரே நாளில் 229 பேரும், செங்கல்பட்டில் ஒரே நாளில் 127, ஈரோட்டில் 104 பேரும் என அடுத்தடுத்த பாதிப்பு நிலையில் உள்ளனர். அதாவது முதலிடத்தில் கோவையும் அடுத்ததாக சென்னையும் உள்ளதுதான் கலக்கத்தை தந்து வருகிறது.. தற்போது 3 வது அலை பரவல் வர உள்ளதாக எச்சரிக்கைகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போதைய பாதிப்பானது உயர்ந்தபடியே வருகிறது.

முன்னேற்பாடுகள்
பக்கத்து மாநிலமான கேரளாவில் கடந்த சில நாட்களாகவே தினசரி பாதிப்பு ஆயிரத்தைக் கடந்து வந்தது.. இந்நிலையில் கடந்த 2 நாட்களாகத்தான் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது.. எனினும் அந்த மாநில பாதிப்பு கோவை பக்கம் வந்துவிடக்கூடாது என்பதால் தீவிர முன்னேற்பாடுகள் கையில் எடுக்கப்பட்டுள்ளன.. அனைத்து செக்போஸ்ட்களிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

விடுமுறை
இதனிடையே, கோவை மாவட்டம் சூலூர் அருகே சுல்தான்பேட்டை அரசு பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது... ஆனால் அந்த 3 மாணவர்களுக்கும் அறிகுறிகளே இல்லையாம்.. டெஸ்ட் எடுத்தபிறகுதான் கொரோனா உறுதியாகியுள்ளது...
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications