வாட்.. 1 லட்சம் டெபாசிட் செய்தால் 15 ஆயிரம் வட்டி! சென்னை கம்பெனியில் குவிந்த மக்கள்.. 360 கோடி காலி
சென்னை: சென்னையில் ரூ 1 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ 15 ஆயிரம் மாத வட்டி தருவதாக 1500 பேரிடம் ரூ 360 கோடி மோசடி செய்த வழக்கில் ஹிஜாவ் குழும நிர்வாகி ஒருவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
சென்னையை தலைமையிடமாக கொண்டு ஹிஜாவ் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் கீழ் எஸ்ஜி அக்ரோ புராடக்ட்ஸ் , அருவி ஆக்ரோ புராடக்ட்ஸ், சாய் லட்சுமி, ஆர்.எம்.கே. பிரதர்ஸ் என துணை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

15 சதவீத வட்டி
சவுந்தரராஜன், அலெக்சாண்டர் ஆகியோர் இதன் இயக்குநர்களாக உள்ளனர். ஹிஜாப் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் ரூ 1 லட்சத்திற்கு மாதம் 15 சதவீத வட்டி தருகிறோம் என விளம்பரம் செய்துள்ளனர்.

1500 பேர்
அதை நம்பிய சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள ஹிஜாவ் நிறுவனத்தில் 1500க்கும் மேற்பட்டவர்கள் ரூ 360 கோடியை முதலீடு செய்தனர். ஆனால் வாக்குறுதி அளித்தபடி 1500 பேருக்கும் 15 சதவீத வட்டி பணத்தை தரவில்லை என தெரிகிறது. இதனால் முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் ஹிஜாப் நிறுவனத்திற்கு சென்று தாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப கொடுக்கும்படி கோரினர்.

முதலீடு செய்தவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை
ஆனால் முதலீடு செய்தவர்கள் அவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. தங்களது நிறுவனத்தை மூடிவிட்டு சவுந்தரராஜனும் அலெக்சாண்டரும் தலைமறைவாகிவிட்டனர். இதனால் 1500 பேரும் பொருளாதார குற்றப்பிரிவில் ஹிஜாவ் நிறுவனத்தின் மீது புகார் அளித்தனர். இது தொடர்பான விசாரணையில் சவுந்தரராஜன், அலெக்சாண்டர், நேரு உள்பட 21 நிர்வாகிகள் பொதுமக்களிடம் மோசடியாக பணம் பெற்று ஏமாற்றியது உறுதியானது.

பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார்
அதைத் தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் 21 பேர் மீதும் 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் சென்னை பெரியார் நகரை சேர்ந்த நேருவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அதிரடியாக நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சவுந்தரராஜன், அலெக்சாண்டர் உள்பட 20 பேரை தேடி வருகிறார்கள்.

தமிழகத்தில் மோசடி
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்து மோசடி செய்யும் நிறுவனங்களின் மீது பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்து கைது செய்து வருகிறது. ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம், எல்வின், இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பொதுமக்களிடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை வசூல் செய்து அதிக வட்டி தருவதாக ஆசை காட்டுகின்றன.

பொதுமக்கள்
இதை நம்பி அதிக வட்டிக்கு ஆசைப்பட்ட பொதுமக்களும் வயிற்றை கட்டி, வாயை கட்டி சேர்த்த பணத்தை கொண்டு போய் கட்டுகிறார்கள். சில நாட்கள் கழித்து இவர்களுக்கு சேர வேண்டிய வட்டி வராததால் அசலையாவது தாருங்கள் என கேட்கும் போது நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாவதும், கொலை மிரட்டல் விடுவதும் வாடிக்கையாகிவிட்டது.

அதிக லாபம்
இது போல் மக்களிடம் பணத்தை வாங்கும் நிறுவனங்களிடம் எப்படி அதிக வட்டி தருவீர்கள் என வாடிக்கையாளர் பணம் செலுத்துவதற்கு முன்பு சந்தேகம் எழுப்பினால், உரிமையாளர்களும் ஊழியர்களும், "உங்களிடம் இருந்து பெறப்படும் தொகை துபாயில் உள்ள எண்ணெய் நிறுவனங்களிலும் சிங்கப்பூர், ஜப்பானில் உள்ள தொழிற்சாலையிலும் முதலீடு செய்யப்படுகிறது. இதனால் எங்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. எங்கள் லாபம் போக உங்களுக்கு அதிக வட்டியை தருகிறோம்" என கூறி வாடிக்கையாளர்களின் வாயை அடைத்து விடுகிறார்கள். இதை நம்பி பணம் கட்டி ஏமாறுவது வாடிக்கையாகிறது. போலீஸாரும் எத்தனை விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தாலும் ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications