தமிழக ரயில் நிலைய பெயர்ப் பலகைகளில் முன்னிலைப்படுத்தப்படும் இந்தி.. ஓரம்கட்டப்பட்ட தமிழ், ஆங்கிலம்!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் உள்ள பழைய பெயர்ப் பலகையில், அந்தந்த ரயில் நிலையத்தின் ஆங்கிலப் பெயர் பிரதானப்படுத்தப்பட்டிருந்த நிலையில், புதிய பெயர்ப் பலகையில் இந்து வார்த்தை பிரதானப்படுத்தப்பட்டுள்ளது விவாதமாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே பின்பற்றப்பட்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிகளை மாணவர்கள் கற்கும் வகையில் மத்திய அரசு வடிவமைத்தது. இதனை தமிழக அரசு இதுநாள் வரை ஏற்கவில்லை. இதனால் தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டிய சுமார் ரூ.2,400 கோடியை மத்திய அரசு விடுவிக்காமல் இருந்து வருகிறது.

லோக் ஆயுக் சந்திப்பின் போது பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கோரிக்கை வைத்த போதும், அந்த நிதி விடுவிக்கப்படவில்லை. இதனிடையே 4 நாட்களுக்கு பின் மொழிப் போர் தியாகிகளுக்கான நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அப்போதும் முதல்வர் ஸ்டாலின் ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும், மும்மொழிக் கொள்கையை ஏற்கப் போவதில்லை என்று அறிவித்தார்.
அதேபோல் மொழிப்போர் தியாகிகள் தொடர்பாகவும், இந்தி திணிப்புக்கு எதிராக தமிழர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாகவும், இந்தி திணிப்புக்கு பின் உள்ள அரசியல் தொடர்பாகவும் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக விவாதம் நடந்து கொண்டே இருக்கிறது. அதெபோல் மத்திய அரசு மறைமுகமாக இந்தியை திணிக்க முயல்வதாகவும் விமர்சனங்கள் எழுந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் பெயர்ப் பலகையில் ஒரு மாற்றம் நடந்து வருகிறது. தற்போது சென்னையில் உள்ள ரயில் நிலையங்களின் பழைய பெயர்ப் பலகைகள் மாற்றம் செய்யப்பட்டது. இதன்பின் புதிய பெயர்ப் பலகைகளில் ஒரு மாற்றத்தை செய்து ரயில்வே துறை வைத்து வருகிறது. அதாவது பழைய பெயர்ப் பலகைகளில் ஆங்கிலப் பெயர் பிரதானப்படுத்தி இருந்தது.
அதாவது மேலே தமிழும், அதன்பின் நடுவில் ஆங்கிலமும், கீழே இந்தியிலும் பெயர்ப் பலகைகள் இருக்கும். ஆனால் புதிய பெயர்ப் பலகையில் மேலே தமிழும், நடுவில் இந்தியும், கீழே ஆங்கிலமும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலமாக மத்திய அரசு இந்தியை முன்னிலைப்படுத்தி பெயர்ப் பலகைகளை அமைப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது மக்களிடையே விவாதமாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications